Top posting users this month
No user |
எமது செயற்பாடுகளை தங்கள் சுயநல நோக்கங்களுக்காக அடிவருடிகள் குழப்ப முயற்சி: சிறீதரன் எம்.பி
Page 1 of 1
எமது செயற்பாடுகளை தங்கள் சுயநல நோக்கங்களுக்காக அடிவருடிகள் குழப்ப முயற்சி: சிறீதரன் எம்.பி
உழவனூர் நாதன் திட்டத்தை சேர்ந்த மக்களை கடந்த நான்காம் திகதி மக்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை கண்டுகொள்ளும் முகமாக பா.உறுப்பினர் சி.சிறீதரன் சந்திப்பொன்றை செய்திருந்தார்.
அப்பிரதேச தமிழ்த் தேசிய கட்சி அமைப்பாளர் தீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பெருமளவான மக்களும் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
கண்டாவளையின் உழவனூர், சிவபுரம், நாதன்திட்டம், புன்னைநீராவி உள்ளிட்ட கிராமங்களில் முக்கிய பிரச்சினையாக காணிப் பிரச்சினை உள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே நாம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் பொது அமைப்புக்களை சந்தித்து, கலந்துரையாடி இலங்கையின் காணி ஆணையாளருடன் கலந்துரையாடிய பின்பு தற்பொழுது அதற்கு ஒரு நிரந்தர தீர்வு வர இருக்கின்றது.
காணிப் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதன் மூலம் வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு முன்பே தீர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தது.
ஆனால் முன்னைய அரசாங்கத்தோடு ஒட்டியிருந்து கொண்டு தீர்வுகளை பின்னடித்து தமது சுயநல அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மக்களிடம் தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகளை, கருத்துக்களை விதைக்கின்றவர்களால் பல விடயங்களை நாம் செய்வதற்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.
தற்போது நீங்கள் ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தின் ஊடாக நீங்களே சில விடயங்களை உரிய முறையில் அணுகி செய்யக்கூடிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பொழுதும் மக்களிடம் வருகின்ற மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டங்கள் உங்களை தவறான வழிகளில் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக திசை திருப்ப முயல்கின்றார்கள்.
இதில் நீங்கள் தெளிவானவர்களாக இருக்கவேண்டுமென தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின்போது கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தவபாலனும் கலந்துகொண்டார்.
அப்பிரதேச தமிழ்த் தேசிய கட்சி அமைப்பாளர் தீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பெருமளவான மக்களும் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
கண்டாவளையின் உழவனூர், சிவபுரம், நாதன்திட்டம், புன்னைநீராவி உள்ளிட்ட கிராமங்களில் முக்கிய பிரச்சினையாக காணிப் பிரச்சினை உள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே நாம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் பொது அமைப்புக்களை சந்தித்து, கலந்துரையாடி இலங்கையின் காணி ஆணையாளருடன் கலந்துரையாடிய பின்பு தற்பொழுது அதற்கு ஒரு நிரந்தர தீர்வு வர இருக்கின்றது.
காணிப் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதன் மூலம் வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு முன்பே தீர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தது.
ஆனால் முன்னைய அரசாங்கத்தோடு ஒட்டியிருந்து கொண்டு தீர்வுகளை பின்னடித்து தமது சுயநல அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மக்களிடம் தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகளை, கருத்துக்களை விதைக்கின்றவர்களால் பல விடயங்களை நாம் செய்வதற்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.
தற்போது நீங்கள் ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தின் ஊடாக நீங்களே சில விடயங்களை உரிய முறையில் அணுகி செய்யக்கூடிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பொழுதும் மக்களிடம் வருகின்ற மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டங்கள் உங்களை தவறான வழிகளில் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக திசை திருப்ப முயல்கின்றார்கள்.
இதில் நீங்கள் தெளிவானவர்களாக இருக்கவேண்டுமென தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின்போது கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தவபாலனும் கலந்துகொண்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum