Top posting users this month
No user |
நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: சிறிய கட்சிகள்
Page 1 of 1
நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: சிறிய கட்சிகள்
எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைக்கு அமையவே நடத்தப்பட வேண்டும் என சிறிய கட்சிகள் நேற்று நடத்திய மாநாட்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் மூன்று விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி, லங்கா சமசமாஜ கட்சி, சோசலிசக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து அடுத்த வாரம் பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது மாவட்ட விகிதாசார அடிப்படையிலான தேர்தல் முறை அமுலில் இருந்து வருகிறது.
இந்த தேர்தல் முறையில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வாழும் சிறுபான்மையினர் விருப்பு வாக்குகள் மூலம் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது.
புதிய தேர்தல் முறை சீர்த்திருத்தத்தின் ஊடாக தொகுதி வாரி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், தென் பகுதிகளில் வாழும் சிறுபான்மை மக்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் சிறிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த மாநாட்டில் மூன்று விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி, லங்கா சமசமாஜ கட்சி, சோசலிசக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து அடுத்த வாரம் பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது மாவட்ட விகிதாசார அடிப்படையிலான தேர்தல் முறை அமுலில் இருந்து வருகிறது.
இந்த தேர்தல் முறையில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வாழும் சிறுபான்மையினர் விருப்பு வாக்குகள் மூலம் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது.
புதிய தேர்தல் முறை சீர்த்திருத்தத்தின் ஊடாக தொகுதி வாரி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், தென் பகுதிகளில் வாழும் சிறுபான்மை மக்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் சிறிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum