Top posting users this month
No user |
மொழிகளை கற்றுக்கொள்வதனால் ஒற்றுமை மேம்படும்: ருவான்
Page 1 of 1
மொழிகளை கற்றுக்கொள்வதனால் ஒற்றுமை மேம்படும்: ருவான்
இலங்கையில் 30 வருட யுத்தத்திற்கு பிரதான காரணம் மொழி பிரச்சினையாகும், தமிழ், சிங்கள மக்கள் இரு மொழிகளையும் கற்பதன் மூலம் சகோதரத்துவத்தை வளரத்துக்கொள்ள முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
யாழ், பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் தமிழ் மொழி பயிற்சியை நிறைவு செய்த 320 இராணுவ படை உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்களவர்களும் தமிழர்களும் மொழிகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த மொழிகளைக் கற்றுக்கொள்வது மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினரும், சிங்கள மக்களும் தமிழை கற்பதன்மூலம் தமிழ் மக்களை வெற்றிக்கொள்ளமுடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அடுத்தவர் மொழிகளை புறக்கணித்தமை காரணமாக இரண்டு இனங்களுக்கு இடையிலும் பிரிவினை ஏற்பட்டது, இது தீவிரவாத போக்குடையவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ், பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் தமிழ் மொழி பயிற்சியை நிறைவு செய்த 320 இராணுவ படை உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்களவர்களும் தமிழர்களும் மொழிகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த மொழிகளைக் கற்றுக்கொள்வது மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினரும், சிங்கள மக்களும் தமிழை கற்பதன்மூலம் தமிழ் மக்களை வெற்றிக்கொள்ளமுடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அடுத்தவர் மொழிகளை புறக்கணித்தமை காரணமாக இரண்டு இனங்களுக்கு இடையிலும் பிரிவினை ஏற்பட்டது, இது தீவிரவாத போக்குடையவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum