Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சல்மான் கானுக்கு கிடைத்தது ஜாமீன்: தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு

Go down

சல்மான் கானுக்கு கிடைத்தது ஜாமீன்: தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு Empty சல்மான் கானுக்கு கிடைத்தது ஜாமீன்: தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு

Post by oviya Fri May 08, 2015 1:11 pm

நடிகர் சல்மான் கான் ஜாமீன் மனு மீதான விசாரணையில், அவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், ஜாமினை நீட்டித்தும் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சல்மான் கான் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த வழக்கின் மீதான, ஜாமீன் மனு விசாரணை இன்று தொடங்கியுள்ளது.

2002–ம் ஆண்டு நடந்த கார் விபத்து வழக்கில், சல்மானுக்கு மும்பையில் உள்ள செஷனஸ் நீதிமன்றம், போதையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.

அதையடுத்து உடனடியாக தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்தும் ஜாமீன் கோரியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

அதை ஏற்று அவருக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம். மேலும் அந்த மனு மீது விசாரணை இன்று தொடங்கியுள்ளது.

ஏற்கனவே கீழ் நீதிமன்றத்தில் சல்மான் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இருப்பதால் இன்றைய விசாரணைக்கு அவர் ஆஜராக தேவையில்லை.

இதனால் இன்று சல்மான்கான் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை. மும்பை நீதிமன்றத்துக்கு இன்றுதான் கடைசி பணி நாள். மேலும், நாளை தொடங்கி வரும் யூன் 8ம் திகதி வரை நீதிமன்றம் விடுமுறை என்பதால் இன்றைய தினமே ஜாமீன் வழங்கப்படுமா என்பது தெரிந்து விடும்.

மேலும், இதில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டால் அவர் சிறைக்கு செல்ல நேரிடும் என்பதால் வழக்கு விசாரணை பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் இணைப்பு

நடிகர் சல்மான் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து வரும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு வெளியே ரசிகர் ஒருவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்த சூழலில் சல்மான் கானின் ரசிகர்கள் அவரின் வீடு மற்றும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு வெளியேயும் கூடியுள்ளனர்.

இந்நிலையில் சல்மானின் தீவிர ரசிகர் ஒருவர் நீதிமன்றத்திற்கு வெளியே விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார்.

இதையடுத்து பொலிசார் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மூன்றாம் இணைப்பு:

நடிகர் சல்மான் கான் ஜாமீன் மனு மீதான விசாரணையில், அவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், ஜாமினை நீட்டித்தும் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை சல்மான் கான் வெளிநாட்டிற்கு செல்ல கூடாது எனவும், அவர் தனது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஜாமின் பிணையத் தொகையாக ரூ.30,000 செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum