Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு உரிய மரியாதை- எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம்: ரணில்

Go down

இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு உரிய மரியாதை- எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம்: ரணில் Empty இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு உரிய மரியாதை- எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம்: ரணில்

Post by oviya Fri May 08, 2015 1:02 pm

நாட்டின் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு தகுந்த மரியாதை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆட்சியின் போது நாட்டின் பாதுகாப்பிற்காக உழைக்கும் இராணுவத்தினருக்கோ, பொலிஸாருக்கோ உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை.

இதனால் அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்குவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் தற்போது உரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் சில பகுதிகளிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறு கோரப்பட்டு வருகின்றது.

எனினும் இராணுவத்தினர் அகற்றப்படமாட்டர்கள் என பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்காகவே அவர்கள் ஆங்கு நிலைகொண்டுள்ளார்கள் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எமது நாட்டு பாதுகாப்பு படையினர் மிகவும் திறமை மிக்கவர்கள் என அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது பாராட்டு தெரிவித்தார் என சுட்டிக்காட்டிய பிரதமர்,

அவர்களை உலக நாடுகளின் பாதுகாப்பில் பங்களிப்பு செலுத்துமாறு ஆலோசனை வழங்கியிருந்தார் என்பதையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம்: பிரதமர் உத்தரவு

எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
வாழ்க்கை செலவு குறித்த குழுவிற்கு அவர் இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருளுக்கான விலை தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது.

இதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுவதாக தெரிவித்து எரிபொருள் விலையை அதிகரிக்க போவதாக தெரிவித்து வந்தது.

இந்நிலையிலேயே எரிபொருள் விலையேற்றம் குறித்த மக்கள் மீது திணிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

100 நாள் வேலை திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் எக்காரணத்தை கொண்டும் மீளப்பெற்றுக்கொள்ளப்பட கூடாது எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum