Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பெருந்தோட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு வேலாயுதம் பிரிட்டனுக்கு அழைப்பு

Go down

பெருந்தோட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு வேலாயுதம் பிரிட்டனுக்கு அழைப்பு Empty பெருந்தோட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு வேலாயுதம் பிரிட்டனுக்கு அழைப்பு

Post by oviya Fri May 08, 2015 12:44 pm

பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்திற்காக பிரித்தானிய அரசாங்கம் உதவ முன்வரவேண்டும் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் கோரிக்கை விடுத்துள்ளார்.



பசுமை பூமி செயற்றிட்டம் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்க முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதுடன்,

பெருந்தோட்ட துறையினருக்கு உதவ பிரித்தானிய அரசாங்கத்திற்கு அதிகமான கடமைப்பாடு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு சகாப்தங்களுக்கு முன்னரே தேயிலை, இறப்பர், கோப்பி, உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவதற்காக இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு அழைத்து வந்தது.

அத்தொழிலாளர்களின் உழைப்பில் தமது நாட்டை வளப்படுத்திக்கொண்ட அவர்கள், தாம் அழைத்து வந்த தொழிலாளர்களை அடிமை வாழ்க்கைக்கு இட்டுச்சென்றனர்.

அன்று முதல் இற்றைக்கு வரை மிக மோசமான லயன் வாழ்க்கைக்குள், மனித வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து பிரித்தானிய அரசோ பிரித்தானிய மக்களோ கரிசனை காட்டாதது பெரிதும் கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வித்துறை, சுகாதார துறை, நவீன தொடர்பாடல் துறை என பல்வேறு துறைகளில் பின்னடைந்து, சொந்த வீடின்றி வாழ்ந்து வரும் இம்மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நடவடிக்கையின் முதல் கட்டமாக 7 பேர்ச் காணியும் காணி உரிமைப் பத்திரமும் வழங்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் இக்காணிகளில் தனி வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

இந்தியாவை விட இத்திட்டத்துக்கு ஆதரவளித்து வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் தார்மீக பொறுப்பு பிரித்தானிய அரசாங்கத்திற்கே காணப்படுகின்றது.

இதனை பிரித்தானிய அரசாங்கத்திற்கு நான் வலியுறுத்தியுள்ளேன் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவருடனும் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரு சகாப்தங்களுக்கு பின்னராவது தங்களால் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் உயர்ச்சிக்காகவும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன்கூடிய தனி வசிப்பிடத்தை அமைப்பதற்காகவும் உதவ வேண்டியது மனித நேயமாகும்.

அந்த மனித நேயத்தை வெளிப்படுத்தி பெருந்தோட்ட சமூகத்தின் நன்மதிப்பை பெற பிரித்தானிய அரசாங்கம் முயற்சி செய்யும் என இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த பல வருடங்களாக மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் பிரித்தானிய அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பெருந்தோட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு வேலாயுதம் பிரிட்டனுக்கு அழைப்பு
» முகவரியற்ற பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கத் திட்டம்
» இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதனடிப்படையில் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum