Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நிதியமைச்சின் அசமந்தப் போக்கினால் நிதிநெருக்கடியைச் சந்திக்குமா வடமாகாண சபை?

Go down

நிதியமைச்சின் அசமந்தப் போக்கினால் நிதிநெருக்கடியைச் சந்திக்குமா வடமாகாண சபை? Empty நிதியமைச்சின் அசமந்தப் போக்கினால் நிதிநெருக்கடியைச் சந்திக்குமா வடமாகாண சபை?

Post by oviya Thu May 07, 2015 12:09 pm

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட முத்திரைவரி கைமாற்றுச் சட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சின் கீழ் உள்ள முகாமைத்துவ சேவைகள் பிரிவின் அங்கீகாரம் கிடைக்கப்பெறாத நிலையில் மாகாண சபை பெருமளவு நிதியிழப்பை எதிர்கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்தநிலையில் குறித்த சட்டம் விரைவில் அமுலுக்கு வரும் என அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 10.09.2014ம் ஆண்டு முத்திரைவரி கைமாற்றுச் சட்டம், நிதி நியதிச்சட்டம், முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம் உள்ளிட்ட 3 நியதிச்சட்டங்கள் வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டத்திற்கு முன்னாள் ஆளுநர் அங்கீகாரம் வழங்க மறுத்த நிலையில் மற்றைய இரு நியதிச்சட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது.

எனினும் முத்திரைவரி கைமாற்றுச் சட்டம் இன்னமும் அமுலுக்கு வராத நிலையே தொடர்கின்றமையினால் உள்ளூராட்சி மன்றங்கள் பாதிப்புக்களை எதிர்கொள்வதாகவும் மாகாண சபை பெருமளவு நிதியிழப்பை செய்து கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடயம் தொடர்பாக மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

முத்திரைவரி கைமாற்றுச் சட்டம் கடந்த 10.09.2014ம் திகதி வடமாகாண சபையில் நிறை வேற்றப்பட்டு ஆளுநரின் அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது.

எனினும் குறித்த சட்டம் நடைமுறைக்கு வருவதில் சில நெருக்குவாரங்கள் இருக்கின்றன. இது விடயமாக நாம் 19.09.2014ம் திகதி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண பிரதம செயலாளர் (முன்னாள்) ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

பின்னர் மீண்டும் 05.01.2014ம் திகதி மீண்டும் முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு பின்னர் 25.02.2015ம் திகதி ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தேன்.

அதில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மாகாண இறைவரி திணைக்களம் மற்றும் இறைவரி ஆணையாளர் ஆகியோரை நியமிப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் கொடுக்கப்பட வேண்டும் எனவும்

சட்டம் இயற்றப்பட்டு பல மாத ங்கள் கடந்துள்ளபோதும் போதுமானளவு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உள்ளூராட்சி மன்றங்கள் பாதிக்கப்படுகின்றன. பெருமளவு நிதியை இழக்கநேரிடுகின்றது என்பதை தெளிவுபடுத்திச் சுட்டியிருக்கின்றேன்.

இதன் பின்னர் 20.03.2015ம் திகதி எனது கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியிருக்கும் பிரதம செயலாளர், முத்திரைவரி கைமாற்றுச் சட்டம் மத்திய நிதி அமைச்சின் கீழ் உள்ள முகாமைத்துவ சேவை பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்களுடைய அனுமதி கிடைக்காத நிலையில் இருப்பதாகவும்,

இதன் பின்னர் 09.03.2015ம் திகதி தான் கொழும்பு சென்று முகாமைத்துவ சேவைகள் பிரிவுடன் பேசியதன் அடிப்படையில் குறித்த சட்டத்திற்கான அங்கீகாரத்தை விரைவில் தருவதாக கூறியதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதனால் குறித்த நியதிச்சட்டம் விரைவில் அமுலுக்கு வரும் மேலும் இறைவரி திணைக்களம் மற்றும் இறைவரி ஆணையாளர் அமைப்பு உள்ளிட்ட இதர விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவைத்தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum