Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கனடாத் தேர்தல்! தமிழர்களுக்குத் தரப்பட்டுள்ள தகுதிநிலை! புதிய கனடிய இனக் குழுமங்களுக்கு மகிழ்ச்சி!

Go down

கனடாத் தேர்தல்! தமிழர்களுக்குத் தரப்பட்டுள்ள தகுதிநிலை! புதிய கனடிய இனக் குழுமங்களுக்கு மகிழ்ச்சி! Empty கனடாத் தேர்தல்! தமிழர்களுக்குத் தரப்பட்டுள்ள தகுதிநிலை! புதிய கனடிய இனக் குழுமங்களுக்கு மகிழ்ச்சி!

Post by oviya Wed May 06, 2015 2:33 pm

ஒன்ராறியோ மாகாணக் கட்சிக்கான தேர்தலில் இரண்டாவது வாக்களிப்பிற்கான தினம் இந்த வியாழக்கிழமை என்றிருந்த போதும் தமிழர்களுக்குத் தரப்பட்டுள்ள தகுதிநிலை வேறு எந்தவொரு இனத்திற்கும் இருந்ததில்லை.
இது புதிய கனடிய இனக் குழுமங்களுக்கு, தங்களது குரல்களும் கேட்கப்படும் காலம் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்தக் கட்சியின் தலைவர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் யாரெனில் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28ம் திகதிக்கு முன்னர் அக் கட்சியில அங்கத்தவர்களாக சேர்ந்தவர்களேயாகும்.

முதலில் ஐந்து வேட்பாளர்கள் களத்தில் குதித்தார்கள். இவர்களில் ஒரு வேட்பாளரைத் தவிர வேறு எந்த வேட்பாளரும் நேரடியாக தமிழர்களிடையே பிரச்சாரம் செய்து அங்கத்தவர்களை இணைக்கவில்லை.

பெப்ரவரி மாதம் 28ம் திகதி ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கத்தவர்களாக இணைந்தார்கள் என்ற செய்தி வெளிவந்த போது, தமிழர்களின் வாக்குகள் ஒன்றுமே செய்யப் போவதில்லை.

அவர்கள் ஒரு குறுகிய பிரதேசத்தில் தான் வசிக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்களுக்கு நாங்கள் 107 தொகுதிகளில் 86 தொகுதிகளில் அங்கத்துவம் கொண்டிருக்கின்றோம் என்ற தமிழர்களின் பதில் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வேட்பாளர்களில் மூவர் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள இருவர் மட்டுமே இப்போது களத்தில் உள்ளனர். இப்போது தமிழர்களின் வாக்குகள் இன்றியமையாததாய் அமைந்து விட்டது என்பதை இரண்டு தரப்புமே காட்டிக் கொண்டது.

எனவே தமிழர்களின் வாக்குக்களைத் தேடியலையும் வேட்டையில் தலைமை வேட்பாளர்களில் ஒருவர் பலமாகவே இறங்கினார்.

ஒரு வானொலி ஊடகத்தை மாத்திரமே மையப்படுத்தி தொடர்ச்சியாக விளம்பரப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவரது பலவீனம் யாதென்றால் இன்றுவரை அவர் விளம்பரங்களில் பேசவில்லை.

ஒரு வேட்பாளர் தமிழர்களின் களத்தில் நிற்கிறார்.

தமிழர்களை வெல்லக்கூடிய தொகுதியில் போட்டியிட வைப்பேன். தமிழர்கள் எனது அமைச்சரவையில் இடம்பெறுவார்கள், தமிழினம் மற்றைய இனங்களைப் போல அரச கட்டமைப்புக்களில் பங்கேற்க வழிசெய்வேன் என போட்டி ஆரம்பித்த முதல்நாளே அறிவித்து விட்டார்.

இவர் அப்படி உறுதிமொழிகளை வழங்கிய போது இவர் வெற்றிக்கான வாய்ப்பு அறிவே இல்லாத ஒரு வேட்பாளராக மற்றையவர்களால் கருதப்பட்டார். இப்போது நிலைமை தலைகீழாக மாறி முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

மற்றைய வேட்பாளரோ தமிழர் என்ற சொல்லை இன்னமும் பாவிக்கவில்லை. சிறுபான்மையினர் என்ற பதத்தில் சகல இனங்களையும் குறிப்பிடுகிறார் அத்தோடல்லமால் இந்த வேட்பாளருக்கு ஆதரவாக முன்னைநாள் அரசியல்வாதிகள் பேசுகிறார்கள், அவர்கள் தாங்கள் இந்த வேட்பாளரை தமிழருக்கு அறிமுகப்படுத்த முனைகின்றார்கள்.

இதன் மூலம் அந்த வேட்பாளர் தமிழருக்கு அந்நியப்பட்டவர் என்ற மறைமுகக் கருத்தைப் பரப்புகின்றார்கள். இது ஒரு பலவீனமான பிரச்சார யுக்தியாகவே பலராலும் பார்க்கப்பட்டது.

அப்படி இந்தத் தலைமை வேட்பாளரை அறிமுகப்படுத்தும் போதும் மேற்படி முன்னைநாள் அரசியல்வாதிகள் அந்த வேட்பாளர் இந்த மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இதுவரை என்ன செய்தார், இனி என்ன செய்யப்போகின்றார் என்பதைக் கூறவில்லை.

அதற்கும் மேலாக “மேற்படி வேட்பாளர் சிறுபான்மையின மக்கள் படும் அல்லல்களை அறிவார்” எனக் கூறி வேட்பாளரை தமிழர் சார் விடயங்களில் நேரடித் தொடர்பில்லாதவர் என எண்ண வைக்கிறார்கள்.

என்னதான் இருந்தாலும் இரண்டு வேட்பாளர்களின் போட்டியிலும் முன்னிலைப்படுத்தப்படுபவர்கள் தமிழர்களாக இருப்பது ஒரு செய்தியைச் சொல்லி நிற்கிறது. இந்த அங்கத்தவர்கள் வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் தமிழர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும்.

எனவே அங்கத்தவர்களாகப் பதிவு செய்தவர்கள் நாளை மறுதினம் வியாழக்கிழமை மாலை 3 மணியிலிருந்து 9 மணிக்கு இடையில் வாக்குகளைச் செலுத்துவதன் மூலம் தமிழர்கள் கனடிய நீரோட்டத்தில் காத்திரமான பங்கு வகிக்க ஆவன செய்ய வேண்டும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum