Top posting users this month
No user |
தீர்வு இல்லையேல் உண்ணாவிரதம்: அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆக்ரோஷம்
Page 1 of 1
தீர்வு இல்லையேல் உண்ணாவிரதம்: அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆக்ரோஷம்
கிழக்கு மாகாண சபையில் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர் என தெரிவித்து குறித்த பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் கிழக்கு மாகாண சபை கட்டட தொகுதிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற தமிழ் பட்டதாரிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என ஆர்ப்பாட்டகாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதுமாத்திரமல்லாது கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு இதுவரை நியமனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தமக்கு உரிய நியமனங்கள் வழங்கப்படாத பட்சத்தில் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் கிழக்கு மாகாண சபை கட்டட தொகுதிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற தமிழ் பட்டதாரிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என ஆர்ப்பாட்டகாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதுமாத்திரமல்லாது கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு இதுவரை நியமனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தமக்கு உரிய நியமனங்கள் வழங்கப்படாத பட்சத்தில் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum