Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மன்னார் ஆயர் குணமடைய வேண்டி பிரார்த்தனை! - விக்கிரமபாகுவை எம்.பி.யாக்கவும் கோரிக்கை

Go down

மன்னார் ஆயர் குணமடைய வேண்டி பிரார்த்தனை! - விக்கிரமபாகுவை எம்.பி.யாக்கவும் கோரிக்கை Empty மன்னார் ஆயர் குணமடைய வேண்டி பிரார்த்தனை! - விக்கிரமபாகுவை எம்.பி.யாக்கவும் கோரிக்கை

Post by oviya Wed May 06, 2015 2:02 pm

கொழும்பு கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவின் இறுதி நாள் நிகழ்வில் சுகவீனமடைந்துள்ள மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை குணமடைய வேண்டி பிரார்த்தனை நடத்தப்பட்டது.
கம்பன் விழாவில் இம்முறை மன்னார் மறை மாவட்ட ஆயருக்கு கம்பன் புகழ் விருது வழங்கப்படவிருந்தது. இந்த விருதைப் பெறுவதற்காக் அவர் கடந்த சனிக்கிழமை கொழும்புக்கு வருகைதந்த போது திடீர் சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கம்பன் விழாவின் இறுதி நிகழ்வில் சான்றோர் கௌரவிப்பு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விருது பெறுவதற்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை வருகைதர முடியவில்லை. அவருக்குப் பதிலாக மன்னார் ஆயரின் செயலாளரும் பங்குத் தந்தையுமான முரளி தலைமையில் மன்னார் ஆயர் இல்லத்தைச் சேர்ந்த பங்குத் தந்தையினர் கலந்துகொண்டதுடன் விருதினையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது கம்பன் விழா ஏற்பாட்டாளர்களினால் மன்னார் மறைமாவட்ட ஆயர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மன்னார் ஆயர் இல்ல பங்குத்தந்தையினர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பிரார்த்தனையின் போது சபையிலிருந்த அனைவரும் எழுந்துநின்று தத்தமது கடவுளை வேண்டி தியானம் செய்திருந்தனர்.

இதேவேளை நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவுக்கும் கம்பன் கழகம் விருது வழங்கி கௌரவித்தது.

அவருக்கு விருது வழங்கப்பட்டதையடுத்து கம்பன் கழகத்தின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் பகிரங்க கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.

அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பிரதேசத்தில் விக்கிரமபாகு கருணாரட்ணவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட வைத்து வெற்றிபெறச் செய்யவேண்டும்.

இதன் மூலம் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் சார்பில் சிங்களவர் ஒருவரது குரல் ஒலிக்கச் செய்யப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதகமாக பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த விழாவில் வடமாகாண சபையின் முதல்வர் சி.வி.கே. சிவஞானம், கொழும்பு முகத்துவாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வர விஷ்ணு ஆலயத்தின் அறங்காவலரும் பிரபல வர்த்தகப் பிரமுகருமான கே. துரைசாமிச் செட்டியார், வானொலி அறிவிப்பாளர் சற்சொரூபவதி நாதன், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி கோதை நகுலராஜா, கல்வியாளர் அல்ஹாஜ் எம்.வை.எம். முஸ்லிம் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum