Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புதிய அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியை பகிர இலங்கை வரும் கெரி!

Go down

புதிய அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியை பகிர இலங்கை வரும் கெரி! Empty புதிய அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியை பகிர இலங்கை வரும் கெரி!

Post by oviya Thu Apr 30, 2015 1:32 pm

இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்காவின் மகிழ்ச்சியை வெளியிடுவதற்காகவே இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்வதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமையன்று 24 மணித்தியால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார்.

கெரி தமது விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.

இந்தநிலையில் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் டெரசிட்டா ஸ்காப்பர், அமெரிக்கா இலங்கையுடன் புரிந்துணர்வுடன் கூடிய உறவை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் சிறந்த உறவு பேணப்படவில்லை.

எனினும் ஜோன் கெரியின் தற்போதைய விஜயம் இலங்கையுடன் புதிய உறவுக்கு வழிவகுக்கும் என்று ஸ்காப்பர் குறிப்பிட்டார்

இலங்கையுடனான உறவை மீளமைக்க வரும் ஜோன் கெரி

அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜயமானது நாட்டின் புதிய அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையை பாராட்டுவதாக அமையும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். 2004 ஆம் விஜயம் செய்த கெலின் பவலின் விஜயத்திற்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாது இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர், நாட்டின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, ஜனாதிபதித் தேர்தலில் சவாலாக அமைந்த மைத்திரிபால சிறிசேன, சர்வாதிகார விதமான ஆட்சியை முடிக்கு கொண்டு வந்து நம்பிக்கையான அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள போவதாக உறுதியளித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல், மனித உரிமை மற்றும் ஊடக சுதந்திரத்தை முன்னேற்றுதல் உள்ளிட்டவை மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி,அமெரிக்கா இலங்கையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடிய நட்புறவை கொண்டிருக்கும் எனக் கூறினார்.

இது இலங்கை, ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விடயங்களில் கலங்கரை விளக்கமாக மாற உதவும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் கீழ் இலங்கையுடனான அமெரிக்காவின் தொடர்புகள் ஒரு சிக்கலுக்குரியதாக மாறியதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் டெரிசிட்டா ஷேபர் தெரிவித்துள்ளார்.

போர் குற்றம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இந்த சிக்கல் நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்களுடன் ஒத்துழைப்புடன் பணியாற்ற சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இலங்கைக்கு எதிரான போர் குற்ற அறிக்கை வெளியிடப்படுவதை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க இணங்கியது.

ராஜபக்ச அரசாங்கம், தனிநாடு கோரி 30 வருடங்களாக போராடிய விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதிரான சிவில் போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் அரசாங்கம் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை கொலை செய்துள்ளதாக விசாரணையாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

ஐ.நா அறிக்கை வெளியிடப்படுவது ஒத்திவைக்கப்பட்டதை தாம் ஆதரிப்பதாக .இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஷேபர் கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, தமிழ் மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அத்தோடு ஜோன் கெரி இலங்கையின் வெசாக் பண்டிகை கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள உள்ளார். இலங்கையுடனான தொடர்புகளை புதுவிதமான வகையில் உருவாக்கும் செயற்பாடுகளின் ஒரு அங்கமாக ஜோன் கெரியின் இந்த நடவடிக்கைகள் அமையும் எனவும் முன்னாள் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சமாதானம், நல்லிணக்க இலக்கை அடையும் இலங்கையின் முயற்சிக்கு அமெரிக்கா கூடியளவு பிரயோசனமான உதவிகளை வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum