Top posting users this month
No user |
Similar topics
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை
Page 1 of 1
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் செய்த நிலையில் நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் உறவினர்களை தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுச் சென்ற மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த பல இளைஞர்கள் நாடு திரும்பியிருந்தனர்.
இவர்களில் 16க்கும் மேற்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற சட்டத்துக்கும் சமாதானத்துக்குமான அமைச்சின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விரிவாக எடுத்துக் கூறினேன்.
கடந்த காலத்தில் தமது அச்சநிலையினை போக்க வாக்களித்த மக்கள் இன்று கைதுகள் மூலம் மீண்டும் அச்சநிலைக்கு உட்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தேன்.
எனவே கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவித்து இது போன்ற கைதுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு இதன் போது சட்டத்துக்கும் சமாதானத்துக்குமான அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
இதன்போது அமைச்சர் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறும், அவர்களுடன் கலந்துரையாடி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அத்துடன் இனிவரும் காலங்களில் கைதுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் என்னிடம் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் அமைச்சருடனான சந்திப்பு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளதால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை என்னுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுச் சென்ற மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த பல இளைஞர்கள் நாடு திரும்பியிருந்தனர்.
இவர்களில் 16க்கும் மேற்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற சட்டத்துக்கும் சமாதானத்துக்குமான அமைச்சின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விரிவாக எடுத்துக் கூறினேன்.
கடந்த காலத்தில் தமது அச்சநிலையினை போக்க வாக்களித்த மக்கள் இன்று கைதுகள் மூலம் மீண்டும் அச்சநிலைக்கு உட்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தேன்.
எனவே கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவித்து இது போன்ற கைதுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு இதன் போது சட்டத்துக்கும் சமாதானத்துக்குமான அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
இதன்போது அமைச்சர் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறும், அவர்களுடன் கலந்துரையாடி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அத்துடன் இனிவரும் காலங்களில் கைதுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் என்னிடம் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் அமைச்சருடனான சந்திப்பு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளதால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை என்னுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர் கைது!
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகளின் பெண் கடற்புலி தளபதிகளில் ஒருவர் மகளுடன் கைது.
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான பகீரதிக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகளின் பெண் கடற்புலி தளபதிகளில் ஒருவர் மகளுடன் கைது.
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான பகீரதிக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum