Top posting users this month
No user |
தக்காளி ஊறுகாய்
Page 1 of 1
தக்காளி ஊறுகாய்
தேவையான பொருள்கள்:
1/2 கிலோ தக்காளியை ஒரளவுக்கு சன்னமான துண்டுகளா கட் செஞ்சுக்கோங்க. அதுல மஞ்சள்தூள், பெருங்காய்ம், புளி, கல் உப்பு எல்லாம் கொஞ்சமா போட்டு நல்லா பிரட்டி விட்டு வெயில்ல வைச்சுடுங்க. இரண்டு இல்லாட்டி மூணு நாள் நல்லா காய வைங்க. தக்காளியில இருக்கிற தண்ணி எல்லாம் வடிஞ்சு காயணும். பிறகு தக்காளியை மிக்சியில போட்டு வரமிளகாய் சேர்த்து நல்லா நைசா அரைக்கணும்.அப்புறம் நல்லெண்ணெய்ல கடுகு தாளிச்சு விட்டு தக்காளி விழுதை போட்டு அது கிளறுங்க. நல்லா கெட்டியா பாத்திரத்தில ஒட்டாம வரும்போது இறக்கி வெச்சுடுங்க. சாதத்துக்கு சைட் டிஷ்ஷா இல்லாம மெயின் ஐட்டமாவே இதை உபயோகிக்கலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட சூப்பரா செட் ஆகும். ஒரு பதினைஞ்சு நாள் வரை வெச்சு உபயோகப்படுத்தலாம்.
மற்றொரு முறை:
தக்காளியை சுடுதண்ணியில் போட்டு ஒரு ரெண்டு நிமிசம் வெச்சு இருந்து அப்புறம் எடுத்து தோல் எடுத்துடுங்க. அதோட மிளகாய்தூள், பூண்டு, உப்பு சேர்த்து அரைச்சு வைங்க. ஒரு வாணலியில பெரிய வெங்காயம் தாளிச்சு விட்டு அரைச்ச வெச்ச தக்காளி விழுது போட்டு அத்தோட கொஞ்சம் புளித்தண்ணி விட்டு நல்லா கெட்டியா வர்ற வரை கொதிக்க வைங்க. இதுவும் நல்லா இருக்கும். ஆனா ஒரு வாரம் வரைதான் இதை உபயோகிக்க முடியும்
குறிப்பு:
தக்காளி புளி சிகப்பு மிளகாய் நன்றாக அரைத்துக் கொண்டு, பின் அடுப்பில் எண்ணெய் தாராளமாக வைத்து வெந்தயப்பொடி கடுகு கருவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் விழுதை சுண்ட சுண்ட வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் இல்லாததால், இந்த ஊறுகாய் நிறைய நாட்கள் இருக்கும்.
1/2 கிலோ தக்காளியை ஒரளவுக்கு சன்னமான துண்டுகளா கட் செஞ்சுக்கோங்க. அதுல மஞ்சள்தூள், பெருங்காய்ம், புளி, கல் உப்பு எல்லாம் கொஞ்சமா போட்டு நல்லா பிரட்டி விட்டு வெயில்ல வைச்சுடுங்க. இரண்டு இல்லாட்டி மூணு நாள் நல்லா காய வைங்க. தக்காளியில இருக்கிற தண்ணி எல்லாம் வடிஞ்சு காயணும். பிறகு தக்காளியை மிக்சியில போட்டு வரமிளகாய் சேர்த்து நல்லா நைசா அரைக்கணும்.அப்புறம் நல்லெண்ணெய்ல கடுகு தாளிச்சு விட்டு தக்காளி விழுதை போட்டு அது கிளறுங்க. நல்லா கெட்டியா பாத்திரத்தில ஒட்டாம வரும்போது இறக்கி வெச்சுடுங்க. சாதத்துக்கு சைட் டிஷ்ஷா இல்லாம மெயின் ஐட்டமாவே இதை உபயோகிக்கலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட சூப்பரா செட் ஆகும். ஒரு பதினைஞ்சு நாள் வரை வெச்சு உபயோகப்படுத்தலாம்.
மற்றொரு முறை:
தக்காளியை சுடுதண்ணியில் போட்டு ஒரு ரெண்டு நிமிசம் வெச்சு இருந்து அப்புறம் எடுத்து தோல் எடுத்துடுங்க. அதோட மிளகாய்தூள், பூண்டு, உப்பு சேர்த்து அரைச்சு வைங்க. ஒரு வாணலியில பெரிய வெங்காயம் தாளிச்சு விட்டு அரைச்ச வெச்ச தக்காளி விழுது போட்டு அத்தோட கொஞ்சம் புளித்தண்ணி விட்டு நல்லா கெட்டியா வர்ற வரை கொதிக்க வைங்க. இதுவும் நல்லா இருக்கும். ஆனா ஒரு வாரம் வரைதான் இதை உபயோகிக்க முடியும்
குறிப்பு:
தக்காளி புளி சிகப்பு மிளகாய் நன்றாக அரைத்துக் கொண்டு, பின் அடுப்பில் எண்ணெய் தாராளமாக வைத்து வெந்தயப்பொடி கடுகு கருவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் விழுதை சுண்ட சுண்ட வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் இல்லாததால், இந்த ஊறுகாய் நிறைய நாட்கள் இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum