Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்று சந்தித்த விஜயகாந்த்: அரசியல் உலகில் பரபரப்பு

Go down

திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்று சந்தித்த விஜயகாந்த்: அரசியல் உலகில் பரபரப்பு Empty திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்று சந்தித்த விஜயகாந்த்: அரசியல் உலகில் பரபரப்பு

Post by oviya Sun Apr 26, 2015 1:12 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் சந்தித்துள்ளார்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது தொடர்பான விஷயத்தில் ஆலோசனை நடத்துவதற்காக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துள்ளார்.

இதற்காக திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

தேமுதிக தொடங்கியதில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்காத அவர், தற்போது முதல் முறையாக அவரை சந்தித்துள்ளார்.

காவிரிப் பிரச்சினை மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் விஜயகாந்த், கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

மேலும், இந்த சந்திப்பைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரையும் விஜயகாந்த் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளோம்: விஜயகாந்த்

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் விஜயகாந்த் செய்தியாளரிடம் பேட்டியளித்துள்ளார்.

அப்போது கூறுகையில், ஏழை விவசாயிகளின் நலன் தொடர்பாக கருணாநிதியை சந்தித்து பேசினேன்.

மேகதாது அணை பிரச்சனை பற்றி கருணாநிதியுடன் விவாதித்தேன், மேலும் செம்மரக்கட்டை கடத்தல், முல்லைப் பெரியாறு, மீனவர்கள் பிரச்சனை, குடிநீர்த் தட்டுப்பாடு, நில கையகப்படுத்தும் மசோதா பற்றியும் விவாதித்தோம்.

அதிமுகவை தவிர அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளேன்.

அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளோம்.

மேலும், திமுக சார்பில் பிரதிநிதியை அனுப்புவதாக கருணாநிதி உறுதி அளித்ததாக கூறியுள்ளார்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum