Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மின்சார நாற்காலிக்கு அஞ்சாதவர்கள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு செல்ல அஞ்சுகின்றனர்: அலவத்துவல

Go down

மின்சார நாற்காலிக்கு அஞ்சாதவர்கள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு செல்ல அஞ்சுகின்றனர்: அலவத்துவல Empty மின்சார நாற்காலிக்கு அஞ்சாதவர்கள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு செல்ல அஞ்சுகின்றனர்: அலவத்துவல

Post by oviya Wed Apr 22, 2015 2:52 pm

நாட்டுக்காக மின்சார நாட்காலியில் அமரத் தயார் என சூளுரைத்த நபர் இன்று இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு செல்ல அஞ்சுவதாக வடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். மாகாணசபையின் நேற்றைய அமர்வுகளின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டவர்கள் கோசம் எழுப்பியும், பதாதைகளை காண்பித்தும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதேவேளை எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலுவத்துவல நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்களை மாகாணசபைக்கும் பரப்புதவற்கு முதலமைச்சர் முயற்சிக்கின்றார்.

பல கோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்ட கள்வர்களை பிடிக்க முயற்சிக்கும் போது இவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது.

மின்சார நாற்காலியில் அமர முடியும் என்று தைரியமாக பேசியவர்கள் இன்று இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு செல்ல ஏன் அஞ்சுகின்றார்கள்?

இந்த விடயத்தை பிடித்துக்கொண்டு மாகாணசபையை நாடக சபாவாக மாற்ற முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum