Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழு எதேச்சதிகார போக்கில் செயற்படுகின்றது: நிமல் சிறிபால டி சில்வா

Go down

இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழு எதேச்சதிகார போக்கில் செயற்படுகின்றது: நிமல் சிறிபால டி சில்வா Empty இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழு எதேச்சதிகார போக்கில் செயற்படுகின்றது: நிமல் சிறிபால டி சில்வா

Post by oviya Tue Apr 21, 2015 1:24 pm

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு எதேச்சதிகார போக்கில் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுயாதீன நிறுவனமாக அது விரும்பிய போக்கில் செயற்படக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் உள்நோக்கத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்திலிருந்து நழுவிச் செல்ல முயற்சிக்கக் கூடாது.

முன்னாள் ஜனாதிபதி ஒருவரை இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பது தொடர்பில் சில நியதிகள் காணப்படுகின்றன என நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சிறந்த தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும்: நிமல்

நாட்டில் ஜனாதிபதி போன்று சிறப்பான பதவிகளை வகித்தவர்கள் தொடர்பாக முடிவெடுக்கும் போது, முறையாக செயற்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச இந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்ற போதிலும் அவருக்கு அரச தலைவர் என்ற மரியாதை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வழியுறுத்தியுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சிறந்த தலைமைத்துவ பண்பு கொண்ட ஒரு தலைவரை நியமிக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ச மீது சில குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதிலும் அவை அனைத்திற்கும் கௌரவமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தாபாய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அவரின் வீட்டிற்கு சென்றுள்ள போது மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைப்பதா நல்லாட்சி என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum