Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பாம்பன் சுவாமிகள் தவம் இருந்த முருகன் கோவில்

Go down

பாம்பன் சுவாமிகள் தவம் இருந்த முருகன் கோவில் Empty பாம்பன் சுவாமிகள் தவம் இருந்த முருகன் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:29 pm

கோவில் தோன்றிய வரலாறு:

இராம நாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்க்கு 30 கிமீக்கு முன்பு இடதுபுறத்தில் வரும் சிறிய கிராமம்தான் பிரப்பன்வலசை என்ற கிராமம், பாம்பன் அருகில் உள்ளது. மிகப்பெரும் முருகபக்தராக விளங்கி சென்னை திருவான்மியூரில் சமாதியடைந்திருக்கும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அவர்கள், சென்னைக்கு வருவதற்க்கு முன்பு பாம்பனில் வசித்தவர்.

முருகன் மீது தீவிர பக்தி கொண்டவரான சுவாமிகள் தான் வழிபடும் உருவங்களில் எல்லாம் முருகனையே காணவேண்டும் என எண்ணம் கொண்டவர். முருகப்பெருமான் தனக்கு காட்சி கொடுக்கவேண்டி முருகனிடம் உபதேசம்பெறவேண்டி மயானமாக இருந்த இந்த இடத்தில் கடும் தவம் மேற்கொண்டார். தவத்திற்கு கடும் இடையூறுகள் வந்தன.

முருகனின் அருளால் அனைத்தையும் உடைத்தெறிந்தார். ஏழாம் நாள் இரவு இரண்டு முனிவர்களுடன் அடியார் உருவத்தில் முருகன் வந்தார். சுவாமிகளிடம் ஒரு வார்த்தையை உபதேசித்துவிட்டு மறைந்தார். சுவாமிகள் அந்த சொல்லை உச்சரித்தபடியே மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். முப்பத்தைந்தாம் நாள் அவரை தவத்தில் இருந்து எழச்சொல்லி அசரீரி கேட்டது.

எம்பெருமான் முருகன் சொன்ன பிறகே எழுவேன் என சுவாமிகள் கூறினார். இது முருகனின் உத்தரவு என அசரீரி கேட்டபிறகே சுவாமிகள் எழுந்தார். முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் இந்த இடத்தில் இவருக்கு தரிசனம் கிடைத்தது. முருகன் காட்சி கொடுத்த இடமாதலால் இங்கு முருகனுக்கு ஆலயம் எழுப்பி வழிபாடு நடந்து வருகிறது.

சித்திரா பெளர்ணமி போன்ற விசேடங்கள் இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் பாம்பன் சுவாமிகளுக்கு முருகன் காட்சி கொடுத்த இடமாதலால் இங்கு தவறாமல் வந்து வணங்கி செல்கிறார்கள். முருகப்பெருமானின் அருளாலும் பாம்பன் சுவாமிகள் அருளாலும் இக்கோவிலில் வணங்கி சென்றால் இன்னல்கள் நீங்கப்பெறுவது இக்கோவிலின் சிறப்பு.

செல்லும் வழி: சென்னை கோயம்பேட்டில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பேருந்துகளில் ஏறி ராமேஸ்வரத்திற்கு முன்பே பிரப்பன்வலசை என்ற கிராமத்தில் இறங்கிகொள்ளலாம். பெரிய பேருந்துகள் நிற்காத கிராமம் என்பதால் பிரப்பன்வலசைக்கு முன்பே உச்சிப்புளி என்ற இடத்தில் இறங்கி ஆட்டோக்களில் செல்லலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum