Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குழந்தைபாக்கியம் அருளும் கோரக்கசித்தர் கோவில் - வடக்கு பொய்கை நல்லூர்

Go down

குழந்தைபாக்கியம் அருளும் கோரக்கசித்தர் கோவில் - வடக்கு பொய்கை நல்லூர் Empty குழந்தைபாக்கியம் அருளும் கோரக்கசித்தர் கோவில் - வடக்கு பொய்கை நல்லூர்

Post by oviya Sat Apr 18, 2015 3:29 pm

18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் இங்கு சமாதியடைந்து கோவில் கொண்டுள்ளார். மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் இக்கோவிலில் மக்களும் பல பிரபலங்களும் வந்து செல்கின்றனர். எப்போதும் கோவில் திறந்திருக்கும் என்றாலும் ஒவ்வொரு பெளர்ணமியன்றும் இக்கோவிலில் மக்கள் கூட்டம் களைகட்டுகிறது.

அன்றிரவு முழுவதும் கோரக்கருக்கு அபிசேகம், ஆராதனைகள் நடக்கிறது. சுனாமி வந்து நாகை பகுதியே கடும் துயர் அடைந்திருந்தபோது நாகப்பட்டினத்தின் ஒரு பகுதியான வடக்கு பொய்கை நல்லூர் என்ற இந்த பகுதி கடும் சேதங்களில் இருந்து தப்பியதாகவும் அதற்க்கு காரணம் இங்கு கோவில் கொண்டுள்ள மஹான் கோரக்கரின் அருள்தான் என்று இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

அன்னக்காவடி நிகழ்வு :

அன்னக்காவடி என்ற ஒரு நிகழ்வு இங்கு பெளர்ணமியன்று பிரசித்திபெற்றது. இங்கு இருந்த கோரக்கர் அன்னக்காவடி வைத்து பிற மக்களிடம் யாசகம் கேட்டு உணவருந்தியவர். இன்றும் இது போலவே கோவிலை சேர்ந்த சாமியார் ஒருவர் பெளர்ணமியன்று இரவு எட்டு மணியளவில் அன்னக்காவடியை சுமந்துகொண்டு ஊரேங்கும் ஒவ்வொரு வீடாக செல்கிறார். அங்கு பலரும் பலவிதமான உணவுகளை அளிக்கின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் சேகரிக்கும் பலவித உணவுகளை எடுத்துக்கொண்டு இரவு 11 மணியளவில் கோவில் திரும்புகிறார். அங்கு பலரது வீட்டில் பெறப்பட்ட உணவுகள் அனைத்து கொட்டப்பட்டு கலக்கப்பட்டு இரவு 12 மணியளவில் கோரக்கருக்கு நடக்கும் பூஜைக்கு படைக்கப்படுகிறது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் உடல் சார்ந்த நோய்கள், வயிற்றுவலி, குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் நீங்கி பலரும் நலமோடு இருப்பதாக கூறப்படுகிறது.

கோவிலுக்கு செல்லும் வழி:

நாகை ரெயில் நிலையம் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து வடக்கு பொய்கை நல்லூர் செல்லும் நகரப்பேருந்துகள், ஷேர் ஆட்டோக்களில் செல்லலாம். பெளர்ணமியன்று சிறப்பு பேருந்துகளும் கூடுதலான ஷேர் ஆட்டோக்களும் இங்கு செல்லும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum