Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கல்யாண சீனிவாசர் கோயில் - திருநெல்வேலி

Go down

கல்யாண சீனிவாசர் கோயில் - திருநெல்வேலி Empty கல்யாண சீனிவாசர் கோயில் - திருநெல்வேலி

Post by oviya Sat Apr 18, 2015 3:12 pm

மூலவர் : கல்யாண சீனிவாசர்
அம்மன்/தாயார் : அலமேலு தாயார்
தீர்த்தம் : கோபால, சீனிவாச தீர்த்தம்
ஆகமம்/பூஜை : வைகானஸம்
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : வித்யகோபாலபுரம்
ஊர் : சன்னியாசி
மாவட்டம் : திருநெல்வேலி

தல சிறப்பு:

இத்தலத்தில் அருள்புரியும் வெங்கடாஜலபதி திருப்பதியில் இருப்பதைப்போலவே தோற்றம் கொண்டுள்ளார். இதனால், இத்தலம் "தென்திருப்பதி' என்ற சிறப்பு பெயர் பெற்றுள்ளது.

சுவாமி தனது வலது மார்பில் ஸ்ரீதேவி, இடது மார்பில் பூதேவி ஆகியோரைத் தாங்கியபடி, கையில் சங்கு, சக்கரம் கொண்டு, இடுப்பில் சந்திரவம்ச உடைவாளுடன் கூடிய ஒட்டியாணம், மேனியில் சப்தகிரி, லட்சுமி, துளசி, தாமரை, செண்பக மாலைகள் அணிந்து, திருப்பாதத்தில் தண்டை, கொலுசு அணிந்த அற்புத கோலத்தில் அருட்காட்சி தருகிறார்.

நேர்த்திக்கடன்:

வேண்டிய காரியங்கள் நிறைவேறிட, வெங்கடாஜலபதிக்கு புஷ்ப அங்கி, வஸ்திரங்கள் சாத்தி, நைவேத்யம் படைத்து, ஊஞ்சல் துலாபாரம் செய்து, முடிகாணிக்கை செலுத்தப்படுகிறது. பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை மாலைகள் சாத்தப்படுகின்றன.

தல வரலாறு:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்லல்படும் மனித இனத்தின் மீது கருணை கொண்ட நாராயணன், சீனிவாசன் என்ற திருநாமம் கொண்டு மனித வடிவில் பூவுலகிற்கு வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் தங்கினார். தாமிரபரணியில் குடிகொண்ட அவரை அறிந்து கொண்ட முனிவர்கள், மகரிஷிகள், சித்தர்கள், மகாபுருஷர்கள் என அனைவரும் அவரைத் துதித்து வணங்கி வந்தனர்.

அவர்களில் சன்னியாசி ஒருவர் இருந்தார். அவருக்கு, சுவாமியின் மனிதரூப காலம் முடிந்து விட்டால், மனித குலம் நற்பயன்கள் பெறமுடியாத சூழல் வந்து விடுமோ?' என்ற பயம் எற்பட்டது. எனவே, நாராயணனை நோக்கி தவம் புரிந்தார். அவரது, குரலுக்கு செவிசாய்த்த நாராயணர், அருட்காட்சி தந்தார்.

அவ்விடத்திலேயே கோயில் கொண்டு மக்களைக் காப்பதாகக் கூறி அருளினார். இவ்வாறு, சன்னியாசியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நாராயணர் இத்தலத்தில் வீற்றிருந்து கல்யாண சீனிவாசர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இந்த இடத்துக்கும் சன்னியாசி கிராமம் என்ற பெயர் ஏற்பட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum