Top posting users this month
No user |
தினம் தினம் வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்கள்: இளம்பெண்ணின் உயிரை பறித்த சோகம்
Page 1 of 1
தினம் தினம் வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்கள்: இளம்பெண்ணின் உயிரை பறித்த சோகம்
மைசூரில் மாணவி ஒருவர் ஆபாச குறுஞ்செய்திகளால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த சுவாதி என்ற 22 வயது பி.பார்ம் மாணவி, கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் வியாழக்கிழமை அன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண்ணின் அறைக் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த சகமாணவிகள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர்.
அப்போது அவர் தனது அறையில் இருந்த ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலைக்கு முன்னதாக சுவாதி எழுதிவைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில், எனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. இந்த கல்லூரியிலும் படிக்கும் மாணவ-மாணவிகளுடன் என்னால் அனுசரித்து செல்ல முடியவில்லை.
எனது கைப்பேசிக்கு தினமும் பல புதிய எண்களில் இருந்து ஆபாச குறுஞ்செய்திகள் வருகின்றன. இதனால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
மேலும், அப்பா, அம்மா, அண்ணன், தம்பி மற்றும் தோழிகள் என்னை மன்னித்துவிடுங்கள் என்றும் எனது முடிவு மூலம் உங்களுக்கு பெரிய துயரத்தை கொடுத்துவிட்டு செல்கிறேன் என்வௌம் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த சுவாதி என்ற 22 வயது பி.பார்ம் மாணவி, கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் வியாழக்கிழமை அன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண்ணின் அறைக் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த சகமாணவிகள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர்.
அப்போது அவர் தனது அறையில் இருந்த ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலைக்கு முன்னதாக சுவாதி எழுதிவைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில், எனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. இந்த கல்லூரியிலும் படிக்கும் மாணவ-மாணவிகளுடன் என்னால் அனுசரித்து செல்ல முடியவில்லை.
எனது கைப்பேசிக்கு தினமும் பல புதிய எண்களில் இருந்து ஆபாச குறுஞ்செய்திகள் வருகின்றன. இதனால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
மேலும், அப்பா, அம்மா, அண்ணன், தம்பி மற்றும் தோழிகள் என்னை மன்னித்துவிடுங்கள் என்றும் எனது முடிவு மூலம் உங்களுக்கு பெரிய துயரத்தை கொடுத்துவிட்டு செல்கிறேன் என்வௌம் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum