Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உள்ளங்கள் நேரான வழி காணட்டும்! உறுதியிலே துன்பம் தூளாகட்டும்!

Go down

உள்ளங்கள் நேரான வழி காணட்டும்! உறுதியிலே துன்பம் தூளாகட்டும்! Empty உள்ளங்கள் நேரான வழி காணட்டும்! உறுதியிலே துன்பம் தூளாகட்டும்!

Post by oviya Sat Apr 11, 2015 3:16 pm

* உங்களை முதலில் சீர்படுத்த முயலுங்கள். பின் உலகத்தைச் சீர்படுத்தும் முயற்சியில்
இறங்குங்கள்.
* இருதயம் விரிவடைந்த இடத்தில் தான் உண்மை ஞானம் உதிக்கும்.
* அன்பு நெறியில் உலக உயிர்களுக்கு உய்யும் வழிகாட்டுவதே ஆன்மிகத்தின் பயனாகும்.
* உலக நன்மைக்கு அவசியமாக இருந்தால் உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்ய தயாராகுங்கள்.
* சாதனைகள் அனைத்தும் இடையூறுகளைக் கடந்தே கைகூடுகின்றன. ஆகையால், என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று, ஆண்மையோடு முயற்சியில் ஈடுபடுங்கள்.
* குழந்தைப் பருவம் முதலே ஆக்கமும், பலமும் நிறைந்த உயர்ந்த எண்ணங்களை மனதில் பதிய வைக்க வேண்டும்.
* உடல், மனம், அறிவு இவற்றை பலவீனப்படுத்தும் எந்த விஷயத்தையும் நஞ்சாகக் கருதி ஒதுக்கித் தள்ளுங்கள்.
* உண்மை எங்கே இழுத்துச் சென்ற போதிலும், அதை மனதைரியத்துடன் பின்பற்றிச் செல்லுங்கள். நேரான வழியில் நடைபோடுங்கள்.
* இந்த உலகில் பிறந்ததற்கு அடையாளமாக ஏதேனும் ஒன்றை சாதித்து விட்டுச் செல்லுங்கள்.
* முதலில் பணியாளனாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் எஜமானராகும் தகுதி தானே தேடி வரும்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் அன்றி, மனதில் உள்ளதை யாரிடமும்
வெளியிடாதீர்கள்.
* பிறருக்காகச் செய்யும் சிறு முயற்சியும் கூட, உள்ளுக்குள் பெரும் சக்தியை எழுப்ப வல்லது.
* நன்மை செய்யும் ஒவ்வொருவருக்கும் கை கொடுக்கத் தயாராக இருங்கள்.
* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளத் தெரிந்தவனே அறிவாளி.
* துணிந்து முடிவெடுத்த பின், உலகமே எதிர்த்து நின்றாலும் பொருட்படுத்த வேண்டாம். ஏற்றுக் கொண்ட கடமையில் இருந்து தளராதீர்கள்.
* ஆண்மையும், வீரமும் கொண்ட நல்ல மனிதர்களால் தான், எந்த செயலையும் சிறப்பாகச் செய்ய முடியும்.
* சுயநலத்திற்காக மற்றவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவனால், சத்திய வழியில் நடக்க முடியாது.
* துன்பமும், ஏழ்மையும் போதிப்பது போல வேறு எதனாலும் நமக்கு சிறந்த பாடத்தைக் கற்றுத் தர முடியாது.
* அரிய பெரிய காரியம் எதுவும் பெரிய உழைப்பை பெறாமல் முற்றுப் பெறுவதில்லை.
* உங்களைத் தாழ்வாக மதிப்பிடாதீர்கள். பணம் மட்டுமே சக்தியல்ல. நன்மையும், தெய்வ பக்தியுமே உங்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.
* பிறர் மீது குற்றம் சுமத்த வேண்டாம். உங்களின் குற்றத்தைக் கண்டு பிடித்து திருத்திக் கொள்ள
முயலுங்கள்.
* அன்பு யாரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதும் இல்லை. ஒருவருக்கும் பயப்படுவதும் இல்லை.
* ஒருவனுக்குத் துன்பம் விளைவித்து விட்டு நீங்கள் மட்டும் சுகமாயிருக்கலாம் என்று தப்புக் கணக்கு போடதீர்கள்.
* சீர்திருத்தப்பட்ட மனம் படைத்த யாரும் மனதறிந்து தவறான பாதையில் நடக்க விரும்ப மாட்டார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum