Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிள்ளைக்காரன் சுவாமி

Go down

பிள்ளைக்காரன் சுவாமி                   Empty பிள்ளைக்காரன் சுவாமி

Post by oviya Sat Apr 11, 2015 3:10 pm


நாடி வரும் தம்பதியருக்கு குழந்தை வரமும், ஒற்றுமையான மனநிறைவான வாழ்வும் அருளும் லட்சுமி நாராயணப் பெருமாள் காஞ்சிபுரம் அருகிலுள்ள மேல்வெண்பாக்கத்தில் அருள்பாலிக்கிறார். "பிள்ளைக்காரன் சுவாமி' எனப்படும் இவரை உத்திராட நட்சத்திரத்தில் தரிசிப்பது சிறப்பு.
தல வரலாறு: திரேதாயுகத்தில் இலங்கையில் ராவண வதத்தில் ஈடுபட்டதால், ஆஞ்சநேயருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. இதனைப் போக்கிக் கொள்வதற்காக, அவர் காஞ்சிபுரம் அருகிலுள்ள மேல்வெண்பாக்கம் தலத்தில் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் லட்சுமி நாராயணப் பெருமாளை வழிபட்டார். பெருமாளின் அருளால் தோஷம் நீங்கியது. அதன் அடிப்படையில் இங்கு கோயில் அமைக்கப்பட்டது. திரேதாயுகத்திற்கும் முந்திய யுகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு "சதுர்யுகப் பெருமாள்' என்றும் பெயருண்டு. மூலவர் லட்சுமி நாராயணப்பெருமாள் என்றும், உற்ஸவர் கல்யாண கோவிந்தராஜப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றனர். திருப்பதி வெங்கடேசப்பெருமாளின் காலத்தைச் சேர்ந்தவராக கருதப்படும் இவரைத் தரிசிக்க ராமானுஜர் விஜயம் செய்துள்ளார்.
சர்ப்ப தோஷ நிவர்த்தி: ராகு, கேது கிரகங்களால் சர்ப்பதோஷம் ஏற்படும். பாம்பைக் கொல்வதாலும் இந்த தோஷம் பரம்பரை பரம்பரையாய் பாதிக்கும். இந்த தோஷம் நீங்க இங்கு வழிபாடு நடக்கிறது.
யமுனையாற்றில் கிருஷ்ணர் நர்த்தனமாடிய காளிங்கன் என்னும் பாம்பு, தன் பாவம் தீர பெருமாளையும், தாயாரையும் வழிபட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. பெருமாளின் திருமார்பில் ஆதிசேஷன், ஐந்து தலையுடன் பதக்கம் போல சேவை சாதிக்கிறார். வைஜெயந்தி மாலை போல திருமேனியில் சுற்றிப் படர்ந்திருக்கும் இவரை பெருமாளின் திருமஞ்சனத்தின் (அபிஷேகம்) போது மட்டுமே தரிசிக்கலாம்.
பிள்ளைக்காரன் சுவாமி: கருவறையில் பெருமாளும் தாயாரும் இடைவெளி இன்றி ஐக்கிய பாவத்தில் வீற்றிருக்கின்றனர். இதனால் இவரை தரிசிக்கும் தம்பதியர் ஒற்றுமையுடன் நீண்ட நாள் வாழும் பாக்கியம் பெறுவர். குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் வெள்ளியன்று பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதோடு, பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட பால் பாயாசத்தை சாப்பிடுவது அவசியம். ஒவ்வொரு மாதமும் உத்திராட நட்சத்திரத்தில் தம்பதியர் ஒற்றுமை சிறக்கவும், குழந்தை வரம் பெறவும் லட்சுமி நாராயண ஹ்ருதய பாராயணம், லட்சுமி நாராயண நவகலச ஹோமமும் நடக்கிறது தனுசு,மிதுன ராசியினருக்கு சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
மகாலட்சுமி க்ஷேத்திரம்: சில நூற்றாண்டுகளுக்கு முன், பதினொரு நிலைகளுடன் கூடிய ராஜகோபுரமும், அஷ்டலட்சுமிகளுக்கு தனித்தனி சந்நிதிகளும் இங்கு இருந்ததாகவும், அந்நியர் படையெடுப்பால் கோயில் அழிந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அஷ்டலட்சுமிகளும் ஒரே லட்சுமியாக கருவறையில் பெருமாளுடன் சேவை சாதிக்கின்றனர். கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் தனித்தனி சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். 1957ல் இங்கு வந்த காஞ்சிப் பெரியவர் இக்கோயிலை "மகாலட்சுமி ÷க்ஷத்திரம்' என்றும், இங்கு சேவித்தால் அஷ்ட லட்சுமியையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது புதிதாக கொடிமரம், மகாமண்டபம், தசாவதார மண்டபம் அமைப்பதற்காக திருப்பணி நடக்கிறது. பக்தர்கள் இதில் பங்கேற்கலாம்.
திறக்கும் நேரம்: காலை 5.30- இரவு 8.00.
இருப்பிடம்: காஞ்சிபுரத்திலிருந்து (வேலூர் சாலையில்) 22 கி.மீ.,
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum