Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேசிய கீதம் தொடர்பில் சிங்கள ராவய வழக்கு தொடர்வதை வரவேற்கின்றேன்!- மனோ கணேசன்

Go down

தேசிய கீதம் தொடர்பில் சிங்கள ராவய வழக்கு தொடர்வதை வரவேற்கின்றேன்!- மனோ கணேசன் Empty தேசிய கீதம் தொடர்பில் சிங்கள ராவய வழக்கு தொடர்வதை வரவேற்கின்றேன்!- மனோ கணேசன்

Post by oviya Sat Apr 11, 2015 12:53 pm

தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதியளித்த தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர போவதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. இதை தான் முழுமனதுடன் வரவேற்பதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் சீலரத்ன தேரர், தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதியளித்தமைக்காக தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களை கண்டித்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை கண்டு நான் பயந்துவிடவோ அல்லது கவலைப்படவோ போவது இல்லை. உண்மையில் சிங்கள ராவய தேரர்களின் இந்த அறிவிப்பை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.

இதன்மூலம் நம் நாட்டில் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டு பேசி வாழ்வோரது அந்தஸ்த்து என்ன என்பதை பற்றி உலகம் அறிந்துக்கொள்ள முடியும்.

உண்மையை வெளியே கொண்டுவர முயலும் சிங்கள ராவய அமைப்புக்கு இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்ளவே விரும்புகிறேன்.

உண்மையில் இந்த நாட்டில் தேசிய மொழிகள் எவை என்பது பற்றி இவர்களுக்கு தெளிவில்லை. உலகத்தில் பல நாடுகளில் தேசிய கீதம் பாடப்படும் முறைகள் பற்றியும் இவர்களுக்கு தெரியவில்லை. இதையிட்டுதான் நான் வருத்தமடைகிறேன்.

சிங்கள ராவய மற்றும் பொதுபல சேனா ஆகிய பிக்குகளின் தலைமையிலான அமைப்புகளுக்கு இடையில் யார் சிங்கள பெளத்தர்களின் தலைவர்கள் என்று பலத்த போட்டி நிலவுவது எனக்கு தெரியும். இதனால்தான் இவர்கள் இத்தகைய அரசியல் கருத்துகளை வெளியிடுகிறார்கள்.

இவர்களுக்கு போட்டியாக நாளை, பொதுபல சேனா அமைப்பு என்னையும், தேசிய நிறைவேற்று சபையில் எனது நிலைப்பாட்டுக்கு இவ்விவகாரத்தில் ஆதரவாக இருக்கின்ற ஏனைய உறுப்பினர்களையும் நாடு கடத்த வேண்டும் என்றும் சொல்லலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum