Top posting users this month
No user |
கஹவத்தயில் பெண்ணொருவரை காணவில்லை! - கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது
Page 1 of 1
கஹவத்தயில் பெண்ணொருவரை காணவில்லை! - கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது
கஹவத்த, கோட்டகெதன பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது மனைவியை இன்று அதிகாலை 1.45 மணியிலிருந்து காணவில்லை என்று வர்த்தகர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் காணாமல் போன பெண் தொடர்பில் இதுவரையிலும் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டகெதன பிரதேசத்தில் கடந்த வருடம் பெண்கள் பலர் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மொரட்டுவையில் கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவர் கைது
மொரட்டுவை பிரதேசத்தில் கொள்ளையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் நுழைந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் ஹபரகட பிரதேசத்தில் வைத்து கைது செய்யயப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து டி56 ரக துப்பாக்கி ரவைகள் 20 மற்றும் 75 கிராம் நிறையுடைய தங்க ஆபரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி நிதி நிறுவனத்துக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி கொள்ளையிட்ட சம்பவத்துடன், இரண்டு சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது மனைவியை இன்று அதிகாலை 1.45 மணியிலிருந்து காணவில்லை என்று வர்த்தகர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் காணாமல் போன பெண் தொடர்பில் இதுவரையிலும் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டகெதன பிரதேசத்தில் கடந்த வருடம் பெண்கள் பலர் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மொரட்டுவையில் கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவர் கைது
மொரட்டுவை பிரதேசத்தில் கொள்ளையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் நுழைந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் ஹபரகட பிரதேசத்தில் வைத்து கைது செய்யயப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து டி56 ரக துப்பாக்கி ரவைகள் 20 மற்றும் 75 கிராம் நிறையுடைய தங்க ஆபரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி நிதி நிறுவனத்துக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி கொள்ளையிட்ட சம்பவத்துடன், இரண்டு சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum