Top posting users this month
No user |
Similar topics
உதயங்க மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழு நியமனம்!
Page 1 of 1
உதயங்க மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழு நியமனம்!
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உதயங்க வீரதுங்க தற்போது எங்கு இருக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க முடியாதிருப்பதாகவும் தேவையேற்பட்டால், சர்வதேச பொலிஸாரின் உதவியும் பெறப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மேடைகளில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் குறித்து பல்வேறு கதைகளை கூறிய போதிலும் பதவிக்கு வந்து 90 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை குறிப்பிட்டுக் கூற கூடிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சு பதவிகளை ஏற்பதும், அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்பது மாத்திரமே இதுவரை நடந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவன்கார்ட் நிறுவனத்தின் ஆயுத விற்பனை, உதயங்க வீரதுங்க மற்றும் விடுதலைப் புலிகளின் ஆயுத விற்பனை ஆகியவற்றுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்குமோ என்ற கடும் சந்தேகம் சமூகத்தில் ஏற்பட்டு வருகிறது.
பதவிக்கு வந்ததும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான விடயங்கள் தொடர்பான விசாரணை தாமதமாகி வருவதால், மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உதயங்க வீரதுங்க, ராஜபக்சவினர் நெருங்கிய உறவினர். ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள், ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றிய செயலாளர் ஒருவரின் கொலை செய்யப்பட்டமை, உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை தொடர்பில் உதயங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உதயங்க வீரதுங்க தற்போது எங்கு இருக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க முடியாதிருப்பதாகவும் தேவையேற்பட்டால், சர்வதேச பொலிஸாரின் உதவியும் பெறப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மேடைகளில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் குறித்து பல்வேறு கதைகளை கூறிய போதிலும் பதவிக்கு வந்து 90 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை குறிப்பிட்டுக் கூற கூடிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சு பதவிகளை ஏற்பதும், அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்பது மாத்திரமே இதுவரை நடந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவன்கார்ட் நிறுவனத்தின் ஆயுத விற்பனை, உதயங்க வீரதுங்க மற்றும் விடுதலைப் புலிகளின் ஆயுத விற்பனை ஆகியவற்றுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்குமோ என்ற கடும் சந்தேகம் சமூகத்தில் ஏற்பட்டு வருகிறது.
பதவிக்கு வந்ததும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான விடயங்கள் தொடர்பான விசாரணை தாமதமாகி வருவதால், மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உதயங்க வீரதுங்க, ராஜபக்சவினர் நெருங்கிய உறவினர். ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள், ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றிய செயலாளர் ஒருவரின் கொலை செய்யப்பட்டமை, உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை தொடர்பில் உதயங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உண்மையை கண்டறியும் குழு மீதான விசாரணை சட்டமா அதிபர் கைகளில் தங்கியுள்ளது
» போதைப்பொருள் பயன்படுத்தியோருக்கு புனர்வாழ்வளிக்கும் சட்டத்தை ஆராய குழு நியமனம்
» ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து புதிய தகவல்
» போதைப்பொருள் பயன்படுத்தியோருக்கு புனர்வாழ்வளிக்கும் சட்டத்தை ஆராய குழு நியமனம்
» ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து புதிய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum