Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அதிகாரப்பகிர்வை குழப்பும் பிரதமர் ரணிலின் நகர்வுகள்!

Go down

அதிகாரப்பகிர்வை குழப்பும் பிரதமர் ரணிலின் நகர்வுகள்! Empty அதிகாரப்பகிர்வை குழப்பும் பிரதமர் ரணிலின் நகர்வுகள்!

Post by oviya Sun Apr 05, 2015 11:58 am

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வடக்கு மாகாணத்துக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, வடக்கு மாகாணசபைக்கு முக்கியத்துவம் அளிக்காததும், வடக்கு மாகாணத்தின் பிரச்சினைகளைக் கவனிக்க சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளதாக வெளியிட்ட தகவலும், அதிகாரப் பகிர்வு விடயத்தில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் வடக்கு மாகாணத்தில் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைவரங்கள், பிரச்சினைகளை அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கேட்டறிந்து கொண்டிருந்தார்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின் னர், பிரதமர் ரணில் நடத்திய உயர்மட்டக் கூட்டங்கள் இவை.

ஆனாலும், இந்தக் கூட்டங்களில் வடக்கு மாகாண சபைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவும் இல்லை, வடக்கு மாகாணசபையின் கருத்துக்களை கேட்டறியவும் இல்லை.

அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கோ அல்லது வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களுக்கோ, முறைப்படியான அழைப்புகளும் விடுக்கப்படவில்லை. இதனை ஒரு எதேச்சையான சம்பவமாக கருத முடியாது. இது திட்டமிட்ட ஒரு சம்பவம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏனென்றால், கடந்த மாதம் இந்தியப் பிரதமரின் இலங்கைக்கான பயணத்துக்கு முன்னதாக, தந்தித் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியில், தாம் அடுத்த சில நாட்களில் வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளப் போவதாகவும், ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்திக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடனேயே தொடர்புகளை வைத்து பேசி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இத்தகைய பின்னணியில், ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான பயணத் திட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்தளவுக்கு ரணிலுக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில், மிகப்பெரிய கருத்து மோதல்கள் ஒன்றும் ஏற்பட்டிருக்கவில்லை. வடக்கில் இருந்து படைகளை விலக்கும் விவகாரமே இதன் அடிப்படை.

ஆனாலும், வடக்கு மாகாணசபையை ஒதுக்கி வைத்துவிட்டு, ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் அதிகாரத்தை வடக்கில் நிலைநாட்ட முயன்றிருக்கிறார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் ஒதுக்கப்பட்ட நிகழ்வை வடக்கு மாகாணசபை ஒட்டுமொத்தமாகவே புறக்கணித்திருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அந்த நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர். இது தமிழ் மக்கள் மத்தியில், கடுமையான விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது.

வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரை விமர்சித்து, அவரைப் புறக்கணித்து செயற்படும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ரணிலின் கூட்டத்துக்குச் சென்றது சரியானதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், பிளவுகளை ஏற்படுத்த ரணில் முயற்சிப்பதாகவும், பிரித்தாளும் தந்திரத்தைக் கையாள்வதாகவும் கூட்டமைப்பின் பிரமுகர்கள் பலரும் வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தியது போலவே, கூட்டமைப்புக்குள்ளேயும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள், இத்தகையதொரு விமர்சனங்களை கொண்டு வந்துள்ளதுடன், அதிகாரப்பகிர்வையும் அர்த்தமற்றதாக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் விசனங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

அதாவது, வடக்கு மாகாணசபை தான், இப்போது வடக்கிலுள்ள தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கான ஒரே அலகாக இருக்கிறது.

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வதே, தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவினாலும் முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தில் உள்ளவர்களும் அதனை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாணசபையைப் புறக்கணித்துச் செயற்பட்டுள்ளது, அதிகாரப்பகிர்வுக் கோட்பாட்டுக்கு முரணானது.

வடக்கு மாகாணசபையை ஒதுக்கி, ஓரம்கட்டி விட்டு, மத்திய அரசின் அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சியாகவே இதனைக் கருதலாம். மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இதே கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது வடக்கு மாகாணசபை வெறும் அலங்காரப் பொம்மையாகத்தான் இருந்தது.

எனினும், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடந்தவாரம் முதல் முறையாக, ஒரு தொகுதி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்திருந்தது வடக்கு மாகாணசபை. இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இப்போதுதான், அதிகாரங்கள் எம்மை நோக்கி வருகின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஒருபக்கத்தில் புதிய அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் நெருக்கமாக பணியாற்ற முனைந்தாலும் இன்னொரு பக்கத்தில் அதனுடன் முரண்பாடு உருவாக்கப்பட்டு வருகிறது.

முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங் கம் வடக்கு மாகாணசபையினரை நிகழ்வுகளுக்கு அழைக்கும், ஆனால், அவர்களி டம் எதையும் செய்வதற்கு அனுமதிக்காது. ஆனால், இப்போதைய அரசாங்கம் அதற்கு எதிர்மாறான வகையில் உள்ளது.

வடக்கு மாகாணசபையினரை ரணில் விக்கிரமசிங்க புறக்கணித்துச் செயற்பட்டாலும், வடக்கு மாகாணசபையின் விவகாரங்களில் அவ்வளவாக குறுக்கிடுவதில்லை.

இப்போதைய மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள், ஜனாதிபதி, பிரதமர் என்று கூறுபட்டிருக்கிறது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, வடக்கு மாகாணசபையும் சரி முரண்படவில்லை. முரண்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவும் இல்லை.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான், வடக்கு மாகாணசபையுடன் முரண்பட்டு வருகிறார். எவ்வாறாயினும், இந்த முரண்பாடுகள் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயும் குழப்பங்கள் உள்ளன. ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பாடுகளை வளர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

காரணம், புதிய அரசாங்கத்துடன் இணங்கிச் சென்றே எதையும் சாதிக்கலாம் என்பது மிதவாத தலைவர்களின் கருத்தாகத் தெரிகிறது. அதனால் தான், முதலமைச்சர் விக்னேஸ்வரன், பந்தாடப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அவருக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மட்டுமே, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்காக, ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்வுகளை புறக்கணித்து தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவது தான் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் என்றால், அந்த நோக்கத்தை அவர் அடைந்து விட்டார் என்றே கூறவேண்டும்.

இல்லை, வடக்கு மாகாணசபையை ஒதுக்கி, அதிகாரப்பகிர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே தமது இலக்கு என்று அவர் கருதியிருந்தால், அதற்காக அவர் இன்னமும் பல படிகளைக் கடக்க வேண்டும்.

ஏனென்றால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாணசபையுடன் முரண்படும் நிலையில் இல்லை.

அவருடன் முரண்படாமல் செயற்படவே, வடக்கு மாகாணசபையும் விரும்புகிறது. இந்தநிலையில், வடக்கு மாகாணத்தின் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்ப்பதற்காக கிளிநொச்சியில் ஒரு அலுவலகத்தை திறக்கப் போவதாகவும், வடக்கு மாகாணத்துக்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கப் போவதாகவும் பிரதமர் ரணில் கூறியிருக்கிறார்.

கிளிநொச்சியில் பிரதமர் அலுவலகத்தை அமைக்கவுள்ளதாகவும், வடக்கிற்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது, வடக்கு மாகாணசபையை ஓரங்கட்டுவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

அரசாங்கம், வடக்கிற்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையை பயன்படுத்திக் கொளளலாம்.

ஆனால், மாகாணசபையுடன் முரண்படும் ரணில், அந்த வழிமுறையைத் தவிர்க்கவே பார்க்கிறார்.

அதேவேளை, மாவட்ட அரசாங்க அதிபர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாகவே இருக்கின்றனர்.

இப்படியான நிலையில், எதற்காக இன்னொரு விசேட பிரதிநிதி என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இது வடக்கு மாகாணசபையின் முக்கியத்துவத்தை மேலும் குறைப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாணசபையின் முக்கியத்துவத்தைக் குறைத்தல் என்பது, அதிகாரப்பகிர்வை நிராகரிப்பதற்கு ஒப்பானது.

வடக்கு மாகாணசபையைப் பலப்படுத்துவதே அதிகாரப்பகிர்வாகப் பார்க்கப்படும் நிலையில், அதற்கு நிகரான புதிய அதிகாரக் கட்டமைப்புகளை மத்திய அரசாங்கம் வலுப்படுத்த முனைவது, சந்தேகங்களையே ஏற்படுத்தும்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில், மத்திய அரசாங்கத்துடன் அதிகம் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நம்பிக்கையில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்தநிலையில், இதுபோன்ற விடயங்களை பெரிதாக்கி, முரண்பாடுகளை தீவிரமாக்க விரும்பவில்லை.

அதேவேளை, இன்னொரு பிரச்சினையும் கூட்டமைப்புக்கு இருக்கிறது.

தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வந்ததும் கூட்டமைப்புத் தான்.

தாமே கொண்டு வந்த அரசாங்கத்துடன் முரண்பாட்டை ஏற்படுத்துவது தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதையும் கூட்டமைப்புத் தலைவர்கள் அறிவார்கள்.

அதனால் தான், வடக்கு மாகாணசபையுடன் முரண்படும் ரணிலையும், அதிகாரப்பகிர்வைப் பலவீனப்படுத்தும் அவரது நகர்வையும் பொறுமையுடன் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பொறுமை எவ்வளவு காலத்துக்கு நீடித்திருக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum