Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஊவா தமிழ் சாகித்திய விழாவின் மூன்றாம் நாள் இன்று!- பிரதமர் ரணில் பங்கேற்கவுள்ளார்

Go down

ஊவா தமிழ் சாகித்திய விழாவின் மூன்றாம் நாள் இன்று!- பிரதமர் ரணில் பங்கேற்கவுள்ளார் Empty ஊவா தமிழ் சாகித்திய விழாவின் மூன்றாம் நாள் இன்று!- பிரதமர் ரணில் பங்கேற்கவுள்ளார்

Post by oviya Sun Apr 05, 2015 11:55 am

10 வது ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா வெள்ளிக்கிழமை காலை மிகவும் கோலாகலமாக பதுளை வீல்ஸ் பாக் மைதானத்தில் ஆரம்பமானது.
இந் நிகழ்விற்கு ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமை தாங்கினார்.

முதல் நாள் நிகழ்வுகள்

முதல் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னான்டோ, இராஜாங்க அமைச்சர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், கே.வேலாயுதம், ஊவா மாகாண அமைச்சர்களான ரவீந்திர சமரவீர, ஜே.எம். குமாரதாச, மாகாண சபை உறுப்பினர் ருத்தரிரதீபன், முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் அ. அரவிந்தகுமார், உட்பட முக்கியஸ்தர்களும் பாடசாலை மாணவர்களும் கலந்துக் கொண்டார்கள்.

இரண்டாம் நாள் நிகழ்வுகள்

“ஊழியேல் எங்கும் ஊவாத்தமிழ் எஃது” என்ற தொனிப்பொருளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்துது 03 நாட்கள் நடைபெரும் தமிழ் சாகித்திய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று காலை ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமயில் ஆரம்பமானது.

இதன் பிரதம அதிதிகளாக இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன், கிழக்கு மாகான கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபானி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்வில் அதிதிகள் வரவழைக்கப்பட்டு தேசிய கீதம், சாகித்திய விழா கீதம் இசைக்கப்ட்டு விழா ஆரம்பமானதுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஊடகவியளாலர்கள் கௌரவிப்பும் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சாகித்திய விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

மூன்றாம் நாள் நிகழ்வுகள்

ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா கடந்த வெள்ளிக்கிழமை பதுளை வில்ஸ் பார்க் மைதானத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் ஊவா மாகாண முதலமைச்சா் ஹரீன் பொ்னாண்டோ, இராஜாங்க அமைச்சா்களான இராதாகிருஷ்ணன்,கே.வேலாயுதம், மாகாண அமைச்சா்களான ரவி சமரவீர, ஆனந்த குமாரசிரி, உறுப்பினா் ருத்திரதீபன் என பலா் கலந்து கொண்டனா்.

இதன்போது பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த தமிழ் சாகித்திய விழா இன்று 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பதுளையில் இடம்பெறவுள்ளது. ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த தமிழ் சாகித்திய விழா நடைபெறுகின்றது.

முதல் தினமான வெள்ளிக்கிழமை தமிழர்களின் கலை கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஊவா மாகாணத்தின் 203 பாடசாலைகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்று தமிழ் கலாசாரத்தை வெளிக்காட்டினா்.

இதனை அடுத்து நேற்று சனிக்கிழமை கண்டி- இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமனின் பிரசன்னமும் இடம்பெற்றது. அதேவேளை, தமிழகத்தின் மனவள கலை மூத்த பேராசிரியர் லட்சுமணனின் பேருரை மற்றும் செயன்முறை என பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதுதவிர, குறிஞ்சி வேந்தன் சிறப்புரையும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள மூன்றாம் நாள் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கின்றார்.

இதன்போது ஆய்வரங்கம், விருது வழங்கல் உள்ளிட்டவை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா ஏற்பாட்டுக்குழுவும்.ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சும் அறிவித்துள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊவா தமிழ் சாகித்திய விழாவின் மூன்றாம் நாள் இன்று!- பிரதமர் ரணில் பங்கேற்கவுள்ளார்
» பிரதமர் ரணில் - புதிய அமைச்சர்கள் இன்று சந்திப்பு
» இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதனடிப்படையில் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum