Top posting users this month
No user |
நியூசிலாந்து கடலில் தத்தளித்த தமிழர்: இளம் பெண்களால் காப்பாற்றப்பட்டும் உயிரிழந்த சோகம்
Page 1 of 1
நியூசிலாந்து கடலில் தத்தளித்த தமிழர்: இளம் பெண்களால் காப்பாற்றப்பட்டும் உயிரிழந்த சோகம்
நியூசிலாந்தில் கடலில் தத்தளித்த போது இளம் பெண்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் பூபேஷ் பழனி (26) என்ற தமிழ் மாணவர் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் கடந்த திங்கட்கிழமை அன்று ஈஸ்ட்போர்ன் (Eastbourne) என்ற இடத்தில் உள்ள கடலில் விழுந்து தத்தளித்துள்ளார்.
அப்போது அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த 15 வயதான கெல்லி மெக்கே (Kelly McKay) மற்றும் 16 வயதான பாய்கே ஓல்ட்ஸ் (Payge Olds) ஆகிய ஒன்றுவிட்ட சகோதரிகள் அவரது அலறல் சத்தத்தை கேட்டுள்ளனர்.
இதையடுத்து உடனடியாக, பாய்கே ஓல்ட்ஸ் துணிச்சலாக கடலில் குதித்துள்ளார்.
அப்போது அவருக்கு கரையில் இருந்து இரண்டு வாலிபர்கள் டார்ச் லைட் அடித்தபடி வழி அவருக்கு காட்டியுள்ளனர்.
கடலில் ஆழத்தில் மூழ்கிய நிலையில் கிடந்த பழனியை கண்டுபிடித்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளார்.
பின்னர் பழனிக்கு கெல்லி மெக்காவ் கரையில் முதலுதவி சிகிச்சை செய்ததையடுத்து வெலிங்டனில் (Wellington) உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழனி, 5 நாட்கள் கடந்த நிலையில் நேற்று மரணம் அடைந்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் பூபேஷ் பழனி (26) என்ற தமிழ் மாணவர் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் கடந்த திங்கட்கிழமை அன்று ஈஸ்ட்போர்ன் (Eastbourne) என்ற இடத்தில் உள்ள கடலில் விழுந்து தத்தளித்துள்ளார்.
அப்போது அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த 15 வயதான கெல்லி மெக்கே (Kelly McKay) மற்றும் 16 வயதான பாய்கே ஓல்ட்ஸ் (Payge Olds) ஆகிய ஒன்றுவிட்ட சகோதரிகள் அவரது அலறல் சத்தத்தை கேட்டுள்ளனர்.
இதையடுத்து உடனடியாக, பாய்கே ஓல்ட்ஸ் துணிச்சலாக கடலில் குதித்துள்ளார்.
அப்போது அவருக்கு கரையில் இருந்து இரண்டு வாலிபர்கள் டார்ச் லைட் அடித்தபடி வழி அவருக்கு காட்டியுள்ளனர்.
கடலில் ஆழத்தில் மூழ்கிய நிலையில் கிடந்த பழனியை கண்டுபிடித்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளார்.
பின்னர் பழனிக்கு கெல்லி மெக்காவ் கரையில் முதலுதவி சிகிச்சை செய்ததையடுத்து வெலிங்டனில் (Wellington) உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழனி, 5 நாட்கள் கடந்த நிலையில் நேற்று மரணம் அடைந்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum