Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை ஜனாதிபதியை அழைத்து பேசுங்கள்: தொல்.திருமாவளவன்

Go down

மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை ஜனாதிபதியை அழைத்து பேசுங்கள்: தொல்.திருமாவளவன் Empty மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை ஜனாதிபதியை அழைத்து பேசுங்கள்: தொல்.திருமாவளவன்

Post by oviya Sat Apr 04, 2015 12:59 pm

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கிருக்கும் ஆட்சியாளர்களும், கட்சிகளும் தமிழக மீனவர் பிரச்சனையில் ஆதாயம் தேட முனைந்துள்ளன. அதனால் தமிழக மீனவர்களின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அவ்வறிக்கை வருமாறு,

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வதும், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. நேற்று மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 37 மீனவர்களையும் அவர்களது 5 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் வளைத்துப் பிடித்துச் சென்றுள்ளனர்.

இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டுமென இலங்கை அரசை வலியுறுத்துகிறோம்.

மார்ச் மாத இறுதியில் இலங்கை-தமிழக மீனவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தமிழக மீனவர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளைப் பரிசீலித்து முடிவைத் தெரிவிப்பதாக இலங்கை மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதனிடையே, அண்மையில் இது குறித்துப் பேசிய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழக மீனவர்களைக் கைது செய்யவும், படகுகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

சுமூகமாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது. அதை இந்திய அரசு கண்டிக்கவோ, அதற்கு மறுப்புத் தெரிவிக்கவோ இல்லை.

அதன் காரணமாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சனையை உடனடியாகத் தீர்த்து விடுவோம் என்று தேர்தல் நேரத்தில் வாய்ச்சவடால் பேசிய பா.ஜ.க.வினர் இப்போது மௌனம் காப்பது ஏன் எனத் தெரியவில்லை.

மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழகத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருக்கிறேன் என இலங்கை ஜனாதிபதி கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே, தமிழக அரசு முன்முயற்சி எடுத்து இலங்கை ஜனாதிபதியை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, மீனவப் பிரதிநிதிகளின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum