Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவை அரசியலுக்கு கொண்டு வர ஐ.தே.கட்சியும் உதவி செய்கிறது: அமைச்சரவை பேச்சாளர்

Go down

மகிந்தவை அரசியலுக்கு கொண்டு வர ஐ.தே.கட்சியும் உதவி செய்கிறது: அமைச்சரவை பேச்சாளர் Empty மகிந்தவை அரசியலுக்கு கொண்டு வர ஐ.தே.கட்சியும் உதவி செய்கிறது: அமைச்சரவை பேச்சாளர்

Post by oviya Fri Apr 03, 2015 12:28 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வர ஐக்கிய தேசியக் கட்சியும் உதவி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு கிடைக்கும் எனவும் அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய யோசனைகள்

மத மற்றும் இன பகையுணர்வுகளுக்கு உதவும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்யவும் அப்படியான கருத்துக்களை வெளியிடுவோருக்கு தண்டனை வழங்க தேவையான திருத்தங்களை குற்றவியல் சட்டத்தில் சேர்க்கும் நோக்கிலும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சரவையில் கொண்டு வந்த யோனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலத்திரனியல் அடையாள அட்டை, கைவிரல் ஆகியவற்றுடன் ஆட்களில் விபரங்களை உள்ளடக்கும் யோசனைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச வெசாக் தினத்தை மஹியாங்கனையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் ஒரு கிலோ தேயிலைக்கு 80 ரூபா நிர்ணயித்த விலையை வழங்கவும் அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் சிறிய றப்பர் தோட்ட உரிமையாளர்களுக்கு நியாயமான விலையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாகிஸ்தான் விஜயத்தின் போது, இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் மற்றும் பாகிஸ்தான் கப்பல் கூட்டுத்தாபனத்திற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.

இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் விவசாய நிறுவனங்களை மேம்படுத்த ஜப்பான் 55 கோடி ரூபாவை வழங்க இணங்கியுள்ளது.

விலை மனுக்கள் கோராமல் முன்வைக்கப்படும் திட்ட யோசனைகளை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வதில்லை எனவும் அப்படியான யோசனைகள் தொடர்பில் விலை மனுக்களின் அடிப்படையில் செயற்படுவது எனவும் அமைச்சரவை இன்று தீர்மானித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum