Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தென்னாபிரிக்காவில் தமிழ் மொழியைத் தக்க வைக்க உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆற்றியுள்ள பணி

Go down

தென்னாபிரிக்காவில் தமிழ் மொழியைத் தக்க வைக்க உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆற்றியுள்ள பணி Empty தென்னாபிரிக்காவில் தமிழ் மொழியைத் தக்க வைக்க உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆற்றியுள்ள பணி

Post by oviya Tue Mar 31, 2015 1:41 pm

தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வந்தாலும் எமது மொழி அழிந்து போய்விடுமோ என்று அஞ்சப்படும் தென்னாபிரிக்காவில் தமிழ் மொழியைத் தக்க வைக்க உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க பணியின் சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமானது இந்தியாவில் உள்ள முதன்மையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான எஸ். ஆர். எம் பல்கலைக் கழகத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டது.

அந்தவகையில், 2013ம் ஆண்டு ஐப்பசி மாதம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பொறுப்பாளர் வி, சு. துரைராஜா, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொன்னவைகோ, பதிவாளர் ஆகியோர் முன்னிலையில் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தென்னாபிரிக்காவில் தமிழ் ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

மேற்படி பயிற்சியை பூர்த்தி செய்த சுமார் 48 ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழாவே எதிர்வரும் சனிக்கிழமை அங்கு நடைபெறவுள்ளது.

அதில் கலந்து கொள்வதற்காக கனடாவிலிருந்து வி. எஸ் துரைரஜா, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் ஆர். என். லோகேந்திரலிங்கமும் நேற்று தென்னாபிரிக்கா பயணமானார்கள்.

லோகேந்திரலிங்கம் முன்னர் இந்தியாவில் மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது துரைராஜாவோடு இணைந்து கையொப்பமிட்டடவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவென தமிழ்நாட்டிலிருந்து எஸ். ஆர். எம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் பச்சமுத்து, பேராசிரியர் இல. சுந்தரம் மற்றும் இலங்கையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோரும் தென்னாபிரிக்காவிற்கு பயணமாகின்றார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» வீரத்தின் பலம் அழிந்தாலும் எமது வாக்குகளின் பலம் ஓங்கி நிற்கும் புத்துணர்வோடு தைப்பொங்கலை கொண்டாடுவோம்! உ.த.பண்பாட்டு இயக்கம்
» மஹிந்த ராஜபக்ச நாட்டுக்கு ஆற்றியுள்ள சேவையை மறக்க முடியாது: தினேஸ் குணவர்தன
» கல்வியினூடாக எமது பண்பாட்டு விழுமியங்களைப்பேணுவோம்: த.தே.கூ வடமராட்சிக்கிழக்கு அமைப்பாளர் சூரியகாந்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum