Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதமர் இன்று யாழ். விஜயம்! பரு. ஹாட்லி கல்லூரியில் ஆய்வுகூடம் திறப்பு!

Go down

பிரதமர் இன்று யாழ். விஜயம்! பரு. ஹாட்லி கல்லூரியில் ஆய்வுகூடம் திறப்பு! Empty பிரதமர் இன்று யாழ். விஜயம்! பரு. ஹாட்லி கல்லூரியில் ஆய்வுகூடம் திறப்பு!

Post by oviya Fri Mar 27, 2015 1:37 pm

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை 10.00 மணிக்கு மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண கச்சேரியில் யாழ். மக்கள் பிரதிநிதிகளையும், அதிகாரிகளையும் சந்தித்து அங்கு நிலவும் குறைபாடுகள், அபிவிருத்தி தொடர்பாகவும் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.

பிரதமருடன் மகளிர் விவகார அமைச்சர் ரோசி சேனநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இதன் பின்னர் பி.ப. 2.00 மணிக்கு யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருணன் ஆகியோர் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர்.

மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய கல்லூரிகளின் அதிபர்களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சினை தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.

இக் கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சரும் கலந்துகொள்ளவுள்ளதோடு, கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

யாழ் செல்லும் பிரதமர் நல்லூர் ஆலயத்திற்கு செல்வார். அத்துடன் யாழ் பேராயரை சந்திப்பதுடன், பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நிகழ்வுகளில் முதல்வர் கலந்து கொள்ளாமை கவலையளிக்கின்றது!.

விஜயகலா மகேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பங்கேற்காமல் இருப்பது கவலையளிப்பதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 2000 ரூபாய் பெறுமதியான போஷாக்கு பொதிகளை வழங்கும் நிகழ்வு, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், அவர் கலந்து கொள்ளவில்லை. அவருடன் வடமாகாண அமைச்சர்களும், வடமாகாண உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் இணைத்ததாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு முதலமைச்சர் கட்டாயம் வருகை தந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வருகை தராதது எனக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.

அவர்கள் வருகை தராமையானது தெற்கு அரசு இங்கு வடமாகாணத்தில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இடமளிப்பதாக அமையும். என்ன கோபதாபங்கள் இருந்தாலும் அதை பொது நிகழ்வுகளில் முன்னிறுத்தாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum