Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சட்டமா அதிபர் மீது நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி தவராசா வாதத்தினால் புதிய சிக்கல்

Go down

சட்டமா அதிபர் மீது நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி தவராசா வாதத்தினால் புதிய சிக்கல் Empty சட்டமா அதிபர் மீது நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி தவராசா வாதத்தினால் புதிய சிக்கல்

Post by oviya Fri Mar 27, 2015 1:33 pm

அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க சட்டமா அதிபர் எடுத்த நடவடிக்கைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லையென நீதிமன்றில் வாதிட்டுள்ளார்.
2014ம் ஆண்டு ஆடி மாதம் 14ம் திகதி பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிசார் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவின்கீழ் தடுத்து வைத்து விசாரணகளை மேற்கொண்ட வழக்கு மேலதிக விசாரணைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, பயங்கரவாதத் தடைப் பிரிவின் பொறுப்பதிகாரி கொழும்பு நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததாவது.

குறித்த வழக்கில் சந்தேக நபரான சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட சுப்பிரமணியம் நிதிகேசனை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாட்டில் தொடர்புகளை கொண்டவர் என்ற சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை நடாத்தி விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபருக்கு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அனுப்பியதாக தெரிவித்தார்.

விசாரணை அறிக்கைகளை பரிசீலனை செய்த சட்டமா அதிபர்,

சந்தேக நபரான சுப்பிரமணியம் நிதிகேசன் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்து. புலிகள் அமைப்பின் தலைமைத்துவ கட்டளைக்கமைய தான் மேற்கொண்ட செயல்பாடுகளையும் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் விபரித்துள்ளார், எனினும் சந்தேக நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யாமல் புனர்வாழ்வளிக்க சட்டமா அதிபர் சிபார்சு செய்துள்ளார் என பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிசார் நீதிமன்றிற்கு தெரிவித்திருந்தனர்.

இதன்போது, பிரபல வர்த்தகரும் சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டவருமான சந்தேக நபரான சுப்பிரமணியம் நிதிகேசன் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தில்,

அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை என்ற தனது சட்ட வாதத்தை முன்வைத்ததுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சான்றுகள் காணப்பட்டால் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது சான்றுகள் இல்லாதவிடத்து விடுதலை செய்யப்பட வேண்டும் இதுதான் சட்டம் என்றும் தெரிவித்தார்.

ஆனால் சட்டமா அதிபர் இவைகளுக்கு மாறாக சான்றுகள் இல்லாதவிடத்து அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்கின்றார்.

வழக்குத் தாக்கல் செய்ய சான்றுகள் இருக்கும் இடத்து அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வாவது வழங்கி விடுதலை செய்யுங்கள் என்பதே அரசியல் கைதிகளின் கோரிக்கையில் ஒன்றாகும். ஆனால் சட்டமா அதிபர் நிரபாராதிகளை விடுதலை செய்யாமல் புனர்வாழ்விற்கு அனுப்புவதன ;மூலம் அரசியல் கைதிகளை தண்டிக்கின்றார்.

2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இல1721/5 விசேட ஒழுங்கு விதியின் கீழ் சுயவிருப்பில் சரணடைந்தவர்களை சரணடைந்த பத்து நாட்களுக்குள் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்ப முடியும்.

ஆனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்து விசாரணை நடாத்திய பின்னர் அரசியல் கைதிகளை புனர்வாழ்விற்கு அனுப்ப முடியும் என சட்டத்தில் எந்தப் பிரிவிலும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் சந்தேகநபரான சுப்பிரமணியம் நிதிகேசனுக்கு எதிராக எந்தச் சாள்றுகளும் இல்லையென்பதுடன் குற்ற ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்படவில்லை. சந்தேக நபர் விசாரணை காலத்தில் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை வழக்கில் சான்றாக பயன்படுத்த முடியாது என்பதை நன்கு தெரிந்த சட்டமா அதிபர் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபரை புனர்வாழ்விற்கு அனுப்ப சட்டரீதியற்ற பிழையான தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நீண்ட காலம் எந்தவித விசாரணையும் ;இன்றி பிணையும் இன்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விரைவான விடுதலைக்காக புனர்வாழ்விற்கு சென்றுள்ளனர் என்ற அடிப்படையில் சட்டம் பிழையாக பாவிக்கப்படுவது தவறான செயல்பாடாகும் என்பதுடன், சந்தேக நபரான எனது கட்சிக்காரர் செய்யாத குற்றத்திற்காக புனர்வாழ்வு என்ற பெயரில் தண்டனையை அனுபவிக்க விரும்பவில்லையென சட்டத்தரணி தனது வாதத்தை முன்வைத்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதிகளை புனர்வாழ்விற்கு அனுப்ப முடியாது என்பதனை கவனத்தில் கொண்ட நீதிபதி, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சட்டமா அதிபர் திணைக்களத்தை கலந்தாலோசனை செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கட்டளையிட்டு மேலதிக விசாரணையை ஏப்ரல் மாதம் 6ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum