Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேசிய அரசாங்கம் என்று கூறுவது அரசியல் ரீதியான மோசடி: லால்காந்த

Go down

தேசிய அரசாங்கம் என்று கூறுவது அரசியல் ரீதியான மோசடி: லால்காந்த Empty தேசிய அரசாங்கம் என்று கூறுவது அரசியல் ரீதியான மோசடி: லால்காந்த

Post by oviya Fri Mar 27, 2015 1:30 pm

தற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் எனக் கூறுவது அரசியல் ரீதியான மோசடியாகும் என ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக இணைந்து ஏற்படுத்திக் கொண்ட அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் எனக் கூற முடியாது.

தற்போதைய அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமாகும்.

இந்த தேசிய அரசாங்கம் கள்வனினதும் அவனது தாயினதும் அரசாங்கமாக மாற்றமடைந்துள்ளது. எனவே கள்வர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கு நன்மை ஏற்படும் எனக் கருதப்பட முடியாது. மஹிந்த ராஜபக்ச நல்லவர் அவரைச் சுற்றி இருப்பவர்களே கெட்டவர்கள் என பலர் கூறினார்கள்.

மஹிந்த ராஜபக்ச வீடு சென்றுள்ளார். எனினும் சுற்றி இருந்தவர்கள் தொடர்ந்தும் பதவி வகிக்கின்றார்கள்.

ரணில் பிரதமர் பதவியை வகிக்க வேண்டுமாயின், சுற்றி இருப்பவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது..

தேசிய அரசாங்கத்தின் ஊடாக கள்வர்களை பிடிக்க முடியாது என லால்காந்த தெரிவித்துள்ளார்.

தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இன்றைய அரசாங்கம் தேசிய அரசாங்கமல்ல: கே.டி.லால்காந்த

ஐக்கிய தேசியக் கட்சியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் என்று கூறுவது அரசியல் மோசடி என ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினர் உறுப்பினரான மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

இது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி ஆகியன இணைந்து கூட்டரசாங்கம் எனவும் இதனை தேசிய அரசாங்கம் எனக் கூறி மக்களை தவறாக வழிநடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் லால்காந்த கூறியுள்ளார்.

இந்த தேசிய அரசாங்கம் திருடன் மற்றும் திருடனின் அம்மாவின் அரசாங்கமாக மாறிவிட்டது. இதனால், திருடர்கள் எவருக்கு எப்போதும் தண்டனை வழங்கப்பட போவதில்லை.

அத்துடன் மக்கள் எதிர்ப்பார்ப்புகள் எதுவும் நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெற போவதில்லை எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய நூலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum