Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அழுத்தங்களுக்கு புதிய அரசாங்கம் அடிபணிய கூடாது: விக்ரமபாகு

Go down

அழுத்தங்களுக்கு புதிய அரசாங்கம் அடிபணிய கூடாது: விக்ரமபாகு Empty அழுத்தங்களுக்கு புதிய அரசாங்கம் அடிபணிய கூடாது: விக்ரமபாகு

Post by oviya Wed Mar 25, 2015 12:44 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவருடைய அழுத்தங்களுக்கும் அடிபணிந்து நல்லாட்சி எனும் போர்வையில் மக்களை வேறு வழியில் பயன்படுத்த கூடாது.
நவசமசமாஜ கட்சியின் தலைவரும் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக செயற்பட்டு வருபவர்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள கூடாது என அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிப்பதும் இல்லை, அப்படி நடந்தால் நாங்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் கலந்தாலோசித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும்,

சிறுபான்மையினத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேசிய அரசாங்கத்தின் மூலம் தீர்வொன்றை பெற்று கொடுத்து அவர்களின் நலனை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை கால தாமதமின்றி விரைவில் நீக்கப்பட வேண்டும் என விக்ரமபாகு கருணாரத்ன கேட்டு கொண்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum