Top posting users this month
No user |
ஐ.நா மனித உரிமைகளின் அறிக்கை ஓகஸ்ட்டில் சமர்ப்பிப்பு
Page 1 of 1
ஐ.நா மனித உரிமைகளின் அறிக்கை ஓகஸ்ட்டில் சமர்ப்பிப்பு
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் கையளிக்கப்படும்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் இளவரசர் செய்யத் ராத் அல் ஹுசைன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை அறிக்கையை சமர்பிப்பதற்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்குமாறு தற்போதைய அரசாங்கம் கேட்டு கொண்டிருந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையமும் இதனை ஏற்றுக்கொண்டு எதிர்வரும் செப்டெம்பரில் சமர்பிப்பதற்கு தீர்மானித்தது.
எனினும் பல்வேறு அரசசார்பற்ற அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடலின் போது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் குறித்த விசாரணை அறிக்கை கையளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் இளவரசர் செய்யத் ராத் அல் ஹுசைன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை அறிக்கையை சமர்பிப்பதற்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்குமாறு தற்போதைய அரசாங்கம் கேட்டு கொண்டிருந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையமும் இதனை ஏற்றுக்கொண்டு எதிர்வரும் செப்டெம்பரில் சமர்பிப்பதற்கு தீர்மானித்தது.
எனினும் பல்வேறு அரசசார்பற்ற அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடலின் போது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் குறித்த விசாரணை அறிக்கை கையளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum