Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்த வேண்டியேற்பட்டுள்ளது: விக்ரமபாகு

Go down

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்த வேண்டியேற்பட்டுள்ளது: விக்ரமபாகு Empty நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்த வேண்டியேற்பட்டுள்ளது: விக்ரமபாகு

Post by oviya Mon Mar 23, 2015 12:53 pm

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, தற்போது நிறைவேற்று அதிகாரங்களை ரத்து செய்யாது, அதிகாரங்களில் திருத்தங்களை செய்ய முயற்சிக்கின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளின் அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடி பணிந்துள்ளார்.

இதனால் நாட்டின் புத்திஜீவிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் இணைந்து போராட்டம் நடத்தி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நேரிட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டும். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவதில் தவறில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரங்கள் செல்லக்கூடாது என்ற காரணத்தினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜாதிக ஹெல உறுமயவும் பிரதமர் மற்றும் பாராளுமன்றிற்கு அதிகாரங்கள் செல்லக்கூடாது என கோரி வருகின்றனர்.

அண்மையில் கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விக்ரமபாகு கருணாரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் மகிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கப்பட்ட மரண அடி: விக்ரமபாகு கருணாரட்ன

உருவாகியுள்ள புதிய தேசிய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண அடி என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கொண்டுள்ளது. இது மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர முயற்சிப்போருக்கு கொடுக்கப்பட்ட மரண அடி.

இதனால், ஏற்பட்டுள்ள ஆத்திரத்தினாலேயே, விமல் வீரவன்ஸ, தினேஸ் குணவர்தன போன்றவர்கள் சத்தமிட ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum