Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதியின் முயற்சியினால் புதிய அரசியல் கலாசாரம் உருவாகியுள்ளது: ரணில் - ஐரோப்பிய நாடுகளினது ஆதரவும் இலங்கைக்கு: ஜனாதிபதி

Go down

ஜனாதிபதியின் முயற்சியினால் புதிய அரசியல் கலாசாரம் உருவாகியுள்ளது: ரணில் - ஐரோப்பிய நாடுகளினது ஆதரவும் இலங்கைக்கு: ஜனாதிபதி Empty ஜனாதிபதியின் முயற்சியினால் புதிய அரசியல் கலாசாரம் உருவாகியுள்ளது: ரணில் - ஐரோப்பிய நாடுகளினது ஆதரவும் இலங்கைக்கு: ஜனாதிபதி

Post by oviya Sun Mar 22, 2015 1:19 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி காரணமாக இலங்கைக்குள் புதிய அரசியல் கலாசாரம் உருவாகியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிலைப்பாடுகளை கொண்டு அரசியல் கட்சிகள் இலங்கையின் எதிர்கால நலனுக்காக ஒன்றி்ணைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இலக்குக்கு நாங்கள் இணங்கவில்லை என்று எண்ணுகிறேன். அரசாங்கத்தில் வித்தியாசமான கருத்துக்கள் உள்ளன. அவற்றை விவாதித்து அரசாங்கம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை மக்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும்: ஜனாதிபதி

சர்வதேச சமூகம் புதிய அரசாங்கம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மக்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிராந்திய வலய நாடுகளை மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளினதும் நம்பிக்கையை இலங்கை வென்றெடுத்துள்ளது.

கடந்த அரசாங்கத்தை விடவும் பாரியளவில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

புதிய தொழில்நுட்ப வர்த்தக சமூகத்துடன் முன்னோக்கிப் பயணிக்க, சர்வதேச சமூகத்தின் சகல ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum