Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நல்லாட்சியிலும் கிழக்கு மாகாண சபையில் தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி

Go down

நல்லாட்சியிலும் கிழக்கு மாகாண சபையில் தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி Empty நல்லாட்சியிலும் கிழக்கு மாகாண சபையில் தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி

Post by oviya Sat Mar 21, 2015 12:55 pm

நாட்டில் நல்லாட்சி நடைபெற்று வருகின்றது. தமிழ் கூட்டமைப்பின் மிக நீண்ட காலக் கோரிக்கையான இராணுவ அதிகாரிகள் சிவில் அதிகாரிகளாகக் கடமையாற்றும் நிலை மாற வேண்டும் என்ற கோரிக்கை முற்றாக மாறியுள்ளது.
மஹிந்தரின் ஆட்சிக் காலத்தில் வடக்கு கிழக்கில் இராணுவ அதிகாரிகள் பல பதவிகளில் இருந்து வந்தார்கள். வடகிழக்கு ஆளுனர்கள் உட்பட திருகோணமலை அரசாங்க அதிபராக இராணுவ அதிகாரி ஒருவர் 8 வருடங்களாக கடமையாற்றி வந்தார்.

இந்த இராணுவ அதிகாரிகள் தற்போது நீக்கப்பட்டு சிவில் அதிகாரிகள் கடமையில் அமர்த்தப்பட்பட்டுள்ளார்கள். ஆனால் மழைவிட்டும் தூவாணம் விட்டபாடில்லை என்பது போல்தான் உள்ளது.

காரணம் பதவிக்குத் தகுதியே இல்லாத பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் கிழக்கு மாகாண சபையில் மூன்று பதவிகள் வகித்து வருகின்றார்.

முதலாம் வகுப்பு தரம் கொண்ட இந்த பெரும்பான்மை இனத்தவர் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டு, ஆளுனரின் பதில் செயலாளராகவும், கல்வி அமைச்சின் பதில் செயலாளராகவும் மூன்று பதவிகளில் கடமையாற்றி வருகின்றார்.

இந்தப் பதவிகளில் விசேட தரம் கொண்ட அதிகாரிகளே நியமிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் மற்றும் ஸ்தானக்கோவை மற்றும் வர்த்தமானிச் சட்டமும் உள்ள போதிலும் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் கிழக்கு முதலமைச்சரும் இணைந்து இந்தப் பதவிகளைச் செய்துள்ளதாக அறியப்படுகின்றது.

இந்த மூன்று பதவிகளில் ஒரு பதவி கூட இந்த சிங்கள அதிகாரி வகிக்க முடியாது என்ற சட்டம் உள்ள நிலையில், தகுதியே இல்லாது மூன்று பதவிகளில் இருப்பது என்ன சட்டம்.

தேவைப்படும் தகுதி கொண்ட தமிழ் அதிகாரிகள் உள்ள நிலையில் தகுதியே இல்லாத சிங்கள அதிகாரி ஒருவர் மூன்று பதவிகளில் வகிப்பது என்பது நல்லாட்சியில் அநீதி இல்லையா? அல்லது தமிழ் அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றார்களா?

இந்த ஈனச் செயல்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் உடந்தையாக உள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய அதிகாரி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய பின்பு அந்தச் செயலாளர் பதவி வெற்றிடமானது.

ஆனால் விசேட தரம் கொண்ட தமிழ் அதிகாரியான திருமதி முரளிதரன் மாகாண பிரதம பிரதிச் செயலாளர் பிரத்தியேகப் பயிற்சி என்னும் உப்புச் சப்பு இல்லாத பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இந்த நேர்மையான அதிகாரியை கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வடகிழக்கு சமாதான நீதவான்கள் மற்றும் மனித உரிமை அமைப்பின் பொதுச் செயளாளர் எம்.எம்.நிலாம்டீன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

அணியின் மாகாண சபை உறுப்பினர்களோ இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்பதுதான் அநீதி.

தமிழ் முதலமைச்சர், தமிழ் கல்வி அமைச்சர் ஆகியோர்கள் பதவியில் இருந்தும் கல்வி அமைச்சின் செயலாளராக ஒரு தமிழ் அதிகாரி நியமிக்கப்படவில்லையென்றால் இனிமேல் எப்போது கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பு.

இந்த விடயம் தமிழ், முஸ்லிம் மாகாண சபை ஆட்சியாளர்களின் கடமை இல்லையா. அவர்கள் இந்த விடயத்தில் கரிசனை காட்ட வேண்டாமா? அதிலும் விசேடமாக ஒரு சிறிய அநீதிக்கும் குரல் கொடுக்கும் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் இந்த விடயத்தில் வாயடைத்துப் போய்விட்டார்கள் என்பதுதான் வேடிக்கை.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum