Top posting users this month
No user |
என் கணவர் என்னை கடத்திவிட்டார்: பொலிசில் ஸ்ருதி பரபரப்பு புகார்
Page 1 of 1
என் கணவர் என்னை கடத்திவிட்டார்: பொலிசில் ஸ்ருதி பரபரப்பு புகார்
எழும்பூர் காவல் நிலையத்தில் ஊட்டி அதிமுக நிர்வாகியின் மகள் அவரது காதல் கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
குன்னூரை சேர்ந்த மார்க் ராஜூ (24) கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் ஊட்டி நகராட்சி துணைத் தலைவரும், முன்னாள் அதிமுக நகர செயலாளருமான கோபால கிருஷ்ணனின் மகள் ஸ்ருதியை காதலித்து வந்துள்ளார்.
சென்னை கல்லூரியில் எம்.ஏ படித்து வந்த ஸ்ருதியின் வீட்டில், இந்த காதல் விவகாரம் தெரிந்ததும், அந்த பெண்ணுக்கு வேறொருடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ருதியை, கோபாலகிருஷ்ணன் சென்னையில் இருந்து ஊட்டிக்கு அழைத்து சென்றபோது வழியில், தந்தையை ஏமாற்றிவிட்டு காதலனுடன் ஸ்ருதி தப்பியோடியுள்ளார்.
பின்னர் ராயக்கோட்டை சென்ற இவர்கள் கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு பொலிசில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து கோபாலகிருஷ்ணன் 30 பேர் கொண்ட கும்பலுடன் மார்க் ராஜூவின் வீட்டிற்குள் புகுந்து ஸ்ருதியை கடத்திச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மாணவி ஸ்ருதி, நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் காவல் நிலையம் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், எனது தந்தையுடன் சென்னையில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகிரியில் வைத்து மார்க் ராஜூ என்னை சந்தித்தார்.
அப்போது குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த அவர் என்னை கடத்தி சென்று ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு, தற்போது என்னை அவருடன் இருக்கவேண்டுமென கட்டாயப்படுத்துகிறார்.
மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டுகிறார் என்றும் எனவே, சம்பந்தப்பட்ட மார்க் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை அடுத்து பொலிசார், மார்க் ராஜூ மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், ஸ்ருதியின் இந்த புகாரால் இந்த விவகாரத்தில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குன்னூரை சேர்ந்த மார்க் ராஜூ (24) கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் ஊட்டி நகராட்சி துணைத் தலைவரும், முன்னாள் அதிமுக நகர செயலாளருமான கோபால கிருஷ்ணனின் மகள் ஸ்ருதியை காதலித்து வந்துள்ளார்.
சென்னை கல்லூரியில் எம்.ஏ படித்து வந்த ஸ்ருதியின் வீட்டில், இந்த காதல் விவகாரம் தெரிந்ததும், அந்த பெண்ணுக்கு வேறொருடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ருதியை, கோபாலகிருஷ்ணன் சென்னையில் இருந்து ஊட்டிக்கு அழைத்து சென்றபோது வழியில், தந்தையை ஏமாற்றிவிட்டு காதலனுடன் ஸ்ருதி தப்பியோடியுள்ளார்.
பின்னர் ராயக்கோட்டை சென்ற இவர்கள் கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு பொலிசில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து கோபாலகிருஷ்ணன் 30 பேர் கொண்ட கும்பலுடன் மார்க் ராஜூவின் வீட்டிற்குள் புகுந்து ஸ்ருதியை கடத்திச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மாணவி ஸ்ருதி, நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் காவல் நிலையம் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், எனது தந்தையுடன் சென்னையில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகிரியில் வைத்து மார்க் ராஜூ என்னை சந்தித்தார்.
அப்போது குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த அவர் என்னை கடத்தி சென்று ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு, தற்போது என்னை அவருடன் இருக்கவேண்டுமென கட்டாயப்படுத்துகிறார்.
மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டுகிறார் என்றும் எனவே, சம்பந்தப்பட்ட மார்க் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை அடுத்து பொலிசார், மார்க் ராஜூ மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், ஸ்ருதியின் இந்த புகாரால் இந்த விவகாரத்தில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum