Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பயங்கரவாதம் எது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்: வேலாயுதம்

Go down

பயங்கரவாதம் எது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்: வேலாயுதம் Empty பயங்கரவாதம் எது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்: வேலாயுதம்

Post by oviya Thu Mar 19, 2015 12:12 pm

பயங்கரவாதம் எது என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சர் எஸ்.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் இன்று உலகமயப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதம் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. கடும்போக்குவாதம் மற்றும் அடிப்படைவாதம் என்பனவும் பயங்கரவாதத்தின் ஓர் பிரிவேயாகும்.

மறைமுகமாகவும் நேரடியாகவும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத செயற்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டும். வெள்ளைவான் கடத்தல்கள் பயங்கரவாதமாகவே கருதப்பட வேண்டும்.

மறைமுகமாக பயங்கரவாதமாகவே இதனை கருத வேண்டும். இவ்வாறு பயங்கரவாதம் இன்று பல்வேறு வழிகளில் தலைதூக்கியுள்ளது.

சட்டங்களின் மூலம் மட்டும் பயங்கரவாதத்தை இல்லதொழிக்க முடியாது. இதற்கு இன்னும் பல காரணிகள் தேவைப்படுகின்றன. சில நபர்கள் காலத்திற்கு காலம் பயங்கரவாதத்தை தங்களுக்கு தேவையான வகையில் அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த அர்த்தப்படுத்தல்கள் தொடர்பில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். வடக்கு இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

இதனை அறிந்து கொள்ளாது பயங்கரவாதத்தை அடக்குமுறைக்கு உட்படுத்துவது போதுமானதல்ல. இவ்வாறு செய்தால் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமுண்டு.

பயங்கரவாதம் ஏற்படுவதற்கான காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum