Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தீர விசாரித்த பின் கருத்துக்களை முன்வையுங்கள்: சுரேஸ் பிரேமசந்திரன் ரணிலிடம் வேண்டுகோள்

Go down

தீர விசாரித்த பின் கருத்துக்களை முன்வையுங்கள்: சுரேஸ் பிரேமசந்திரன் ரணிலிடம் வேண்டுகோள் Empty தீர விசாரித்த பின் கருத்துக்களை முன்வையுங்கள்: சுரேஸ் பிரேமசந்திரன் ரணிலிடம் வேண்டுகோள்

Post by oviya Tue Mar 17, 2015 1:20 pm

கடத்தப்பட்டவர்களை தடுத்து வைத்திருக்கும் இரகசிய முகாம்கள் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைக்கும் கருத்தை ஏற்று கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையிலுள்ள கடற்படை முகாமில் 700ற்கும் மேற்பட்டவர்கள் கோத்தபாய முகாமில் வைத்திருந்ததாகவும், வேறு 35 குடும்பங்களை வைத்திருந்ததாக பா.உ சுரேஷ் முன்வைத்த கருத்திற்கு இராணுவ தளபதி மற்றும் கடற்படை தளபதியிடம் விசாரித்ததாகவும்,

அவ்வாறானதொரு இரகசிய முகாம் அங்கு இல்லை என அவர்கள் கூறியதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததையடுத்து நீதி அமைச்சரும் அதே கருத்தையே முன்வைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் ஊழல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன, முன்னாள் அமைச்சர்களின் பல்வேறுப்பட்ட ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது,

பல்வேறுப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாளாந்தம் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொடுத்து அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 700 பேரை கொண்டதொரு முகாம் அந்த முகாம் கோத்தாபாய முகாம் எனும் அடிப்படையில் இயங்கியது, பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இத்தகவலை தெரிவித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

இது தொடர்பில் விசாரிப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வியெழுப்பியுள்ளார், மேலும் குறித்த இரகிசய முகாம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.

குறித்த இரகசிய முகாம் தற்போது இல்லாதிருந்தாலும், கடந்த காலங்களில் அவ்வாறானதொரு முகாம் இருந்தது முற்றிலும் உண்மை என சுரேஷ் பிரேமசந்திரன் ஆணித்தனமாக தெரிவித்துள்ளார்.

இதற்கான சாட்சியங்களுக்கான உயிர் உத்தரவாதங்கள் வழங்கப்படும் பட்சத்தில் அந்த சாட்சியங்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் எவ்வித விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் கடற்படை தளபதி மற்றும் இராணுவ தளபதி கூறினார் எனும் அடிப்படையில் அவ்வாறானதொரு இரகசிய முகாம் இல்லை எனும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும், உண்மைகளை மூடிமறைக்கும் ஒரு யுக்தி எனவும், தமி்ழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த முகாம்கள் குறித்து விசாரணைகளை விரைவில் ஆரம்பியுங்கள் இதன் பின்னர் இது தொடர்பில் கருத்துக்களை முன்வையுங்கள் என சுரேஷ் பிரேமசந்திரன் பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் காணாமல் போன 20 ஆயிரம் பேர் பஸ்வண்டிகளில் ஏற்ப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள், ஆனால் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளாமல் வெறுமனே அவர்கள் அங்கு இல்லை என்பது சாதாரணமான பதில்,

எனவே இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கம் போலல்லாது முழுமையான விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான பதிலை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum