Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழர் பிரச்சினைக்கு காலம் தாழ்த்தாது மைத்திரி அரசு தீர்வு வழங்க வேண்டும்: த.கலையரசன்

Go down

தமிழர் பிரச்சினைக்கு காலம் தாழ்த்தாது மைத்திரி அரசு தீர்வு வழங்க வேண்டும்: த.கலையரசன் Empty தமிழர் பிரச்சினைக்கு காலம் தாழ்த்தாது மைத்திரி அரசு தீர்வு வழங்க வேண்டும்: த.கலையரசன்

Post by oviya Sun Mar 15, 2015 11:51 am

இந்த நாட்டில் நடைபெற்ற போர்ச்சூழல் காரணமாக கிழக்கு மாகாணம் பல அழிவுகளை சந்தித்துள்ளது அந்தவகையில், இங்கு இன்னும் பல பாடசாலைகள் வளப்பற்றாக்குறையுடன் இயங்கமுடியாத நிலையில் காணப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் விசனம் தெரிவிக்கின்றார்.
சம்மாந்துரை விவேகானந்தா வித்தியாலயத்தில் ரன்யோ தனியார் வைத்திய நிறுவனத்தினூடாக பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது நேற்று பாடசாலை அதிபர் பி.பேரானந்தம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், சம்மாந்துரை வலயக்கல்வி பணிப்பாளர் நஜிம், ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி, மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஒரு பாடசாலையின் கல்வி வளர்ச்சியென்பது அந்தக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள் முதற்கொண்டு பெற்றோர்கள், நலன்விரும்பிகளினது அயராத உழைப்பின் மூலமே உச்சநிலையடையும், இதற்கு சிறந்த உதாரணமாக இப்பாடசாலையை குறிப்பிடலாம்.

1990ஆம் ஆண்டிற்கு பிற்பாடு இப்பாடசாலையானது படிப்படியாக வளர்ச்சி கண்டு பெரும் உச்சநிலையை அடைந்து பல்கலைக்கழகம் செல்லக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் கண்டுவந்திருக்கின்றது இதற்கு இங்குள்ள அதிபரினதும், ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும் அயராத முயற்சியே காரணமாகும்.

ஒரு பாடசாலையின் வளர்ச்சியானது ஒற்றுமை, ஒழுக்கம், விட்டுக்கொடுப்பு, ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, சகிப்புத்தன்மை என்பனவற்றை கருத்தில் கொண்டு தனது கல்விச்செயற்பாட்டை கொண்டு நடத்துகின்றபோதுதான் கல்விக்குரிய பெறுபேறு மிக உன்னத இடத்தினை அடையும்.

தற்போதைய அரசியல் சூழலில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சானது கூட்டமைப்பின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் தண்டாயுதபாணிக்கே கிடைத்திருக்கின்றது. இந்தப்பொறுப்பானது மிகவும் காத்திரமான பொறுப்பாகவே எம்மக்களிடையே பார்க்கப்படுகின்றது. முன்னர் கிழக்கு மாகாணத்தின் கல்விப்பணிப்பாளராக இருந்த ஒருவருக்கு இப்பொறுப்பு கிடைத்திருப்பது ஒட்டுமொத்த கிழக்கு மாகாண மக்களுக்கும் கிடைத்த ஒரு பாரிய வெற்றியாகும்.

முன்னைய ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் கல்வித்திணைக்களத்தில் நியமனங்களில் கூட பல மோசடிகள் நடைபெற்றிருக்கின்றது. இனிவரும் காலங்களில் அவ்வாரான மோசடிகளை தவிர்த்து சிறந்த ஒரு நல்லாட்சியை கொண்டு நடத்துவார் என்பதில் எமக்கு எந்தச்சந்தேகமும் இல்லை.

எமது தேசிய அரசியல் என்பது நீதிக்கும், நியாயத்திற்கும் அத்தோடு எங்களுடைய மக்களின் இருப்பு என்ற விடயத்தில் இருந்து எள்ளளவேனும் பின்னிற்கப்போவதில்லை. எமது இனம் பட்ட அனைத்து துன்பதுயரங்களுக்கும் தீர்வை பெற்று இணைந்த வடகிழக்கில் சகல உரிமைகளுடனும் கூடிய ஆட்சியதிகாரத்தினையே எமது கூட்டமைப்பு பன்னெடும் காலமாக கேட்டு நிற்கின்றது.

அந்தத்தீர்வினை எந்த காலதாமதமும் காட்டாது இந்த நாட்டிலே புதிதாக ஆட்சியதிகாரத்தினை கைப்பற்றியிருக்கும் மைத்திரி அரசு செய்து தர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum