Top posting users this month
No user |
நடிகர் ஜெயராம் வீட்டை தாக்கிய வழக்கு: சீமான் நேரில் ஆஜர்
Page 1 of 1
நடிகர் ஜெயராம் வீட்டை தாக்கிய வழக்கு: சீமான் நேரில் ஆஜர்
நடிகர் ஜெயராம் வீடு மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சீமான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
நடிகர் ஜெயராம் கடந்த 2010–ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில் தமிழ்ப் பெண்கள் குறித்து கருத்து தெரிவித்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து 5.2.2010 அன்று சென்னை வளசரவாக்கம், ஜானகி நகரில் உள்ள நடிகர் ஜெயராமின் வீடு மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக சீமான் உள்பட 17 பேர் மீது வளசரவாக்கம் பொலிசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது 3 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து முடிக்க திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு இன்று நீதிபதி வெற்றிச் செல்வி முன்பு விசாரணைக்கு வந்த போது சீமான உள்பட 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர்.
மேலும், நீதிபதி இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 10ம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்திரவிட்டுள்ளார்.
நடிகர் ஜெயராம் கடந்த 2010–ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில் தமிழ்ப் பெண்கள் குறித்து கருத்து தெரிவித்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து 5.2.2010 அன்று சென்னை வளசரவாக்கம், ஜானகி நகரில் உள்ள நடிகர் ஜெயராமின் வீடு மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக சீமான் உள்பட 17 பேர் மீது வளசரவாக்கம் பொலிசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது 3 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து முடிக்க திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு இன்று நீதிபதி வெற்றிச் செல்வி முன்பு விசாரணைக்கு வந்த போது சீமான உள்பட 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர்.
மேலும், நீதிபதி இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 10ம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்திரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum