Top posting users this month
No user |
ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
Page 1 of 1
ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகளை லஞ்ச, ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று கையளித்துள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமாகிய ஏ.எல்.எம்.சபீல் என்பவரால் இன்று காலை 10.30 மணியளவில் முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டன.
முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினாலும் அவரது சகாக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக மிக நீண்ட காலமாகவே தாம் குரல் கொடுத்து வருவதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றத்தினைத் தொடர்ந்து, கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
இந்நிலையில் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு இன்று ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இம்முறைப்பாடுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களையும் சாட்சியங்களையும் ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமாகிய ஏ.எல்.எம்.சபீல் என்பவரால் இன்று காலை 10.30 மணியளவில் முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டன.
முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினாலும் அவரது சகாக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக மிக நீண்ட காலமாகவே தாம் குரல் கொடுத்து வருவதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றத்தினைத் தொடர்ந்து, கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
இந்நிலையில் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு இன்று ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இம்முறைப்பாடுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களையும் சாட்சியங்களையும் ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum