Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காதலியை கொன்று உடலை கடத்த முயற்சி...காதலன் தலைமறைவு

Go down

காதலியை கொன்று உடலை கடத்த முயற்சி...காதலன் தலைமறைவு Empty காதலியை கொன்று உடலை கடத்த முயற்சி...காதலன் தலைமறைவு

Post by oviya Tue Mar 10, 2015 1:47 pm

சென்னையில் வாலிபர் ஒருவர் தனது காதலியை கொன்று உடலை காரில் கடத்த முயன்றது அம்பலமானதால் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனி பராக்கா ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கண்ணப்பன் என்பவ‌ரது மகன் தினேஷ்(25) தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த கண்ணப்பன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது மனைவி உடனிருந்து கவனித்து வருகிறார்.

இதனால் தினேஷ் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார்.

நேற்று இரவு 10.30 மணி அளவில் தினேஷ் போர்வை மற்றும் மெத்தையால் சுற்றி கட்டப்பட்ட மூட்டை ஒன்றை தனது காரில் ஏற்ற முயற்சித்தபோது அதில் இளம்பெண் ஒருவர் ரத்தக் காயத்துடன் உள்ளதை பார்த்த நபர் ஒருவர் பொலிசிற்கு புகார் அளித்துள்ளார்.

பொலிசிடம் புகார் அளிக்கப்பட்டதை அறிந்த தினேஷ், தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற‌ தலைமை செயலக காலனி காவல்துறை ஆய்வாளர் ராமசாமி அந்த பெண்ணின் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே இரவு 11 மணியளவில், சூளைமேடு சட்டண்ண நாயக்கர் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் வேப்பேரி காவல் நிலையத்தில் தனது மகள் அருணாவை காணவில்லை என்று புகார் செய்தார்.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில், தலைமை செயலக காலனி காவல்நிலைய எல்லையில் இறந்த பெண்ணின் சடலத்தை சென்று பார்க்க சொல்லியுள்ளனர்.

அங்கு கொலையுண்ட பெண்ணின் உடலை பார்த்ததும், அது தங்களது மகள் தான் என்று தெரியவந்துள்ளது.

பி.காம் பட்டதாரியான அருணாவும், தினேஷும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், அடிக்கடி தனிமையிலும் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை தினேஷின் வீட்டிற்கு அருணா வந்தபோது இருவருக்கும் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், அருணாவை கண்ணாடி பூந்தொட்டியால் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அருணா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார், தற்போது தினேஷ் எங்கே தலைமறைவாக உள்ளார் என்று தெரியவில்லை.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum