Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் மகிந்த ஆதரவாளர்கள்

Go down

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் மகிந்த ஆதரவாளர்கள் Empty எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் மகிந்த ஆதரவாளர்கள்

Post by oviya Mon Mar 09, 2015 1:09 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அடுத்த பிரதமர் வேட்பாளராக நிறுத்த தயாராகி வரும் தரப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக கடும் அரசியல் தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
நிமால் சிறிபால டி சில்வாவை அடுத்த பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் தயார்படுத்தல்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மேற்கொள்ளப்படுவது தெரியவந்துள்ளதை அடுத்தே, மகிந்த ஆதரவாளர்கள் அவருக்கு எதிரான முனைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், நிமால் சிறிபால டி சில்வா பிரதிநித்துவப்படுத்தும் பதுளை மாவட்டத்தில் தோல்வியடைந்ததை காரணம் காட்டி அவருக்கு எதிராக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எது எப்படி இருந்த போதிலும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் மிகவும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்பட்டிருந்தால், மகிந்த ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெற்றி பெறுவதிலும் சவாலான நிலைமை ஏற்பட்டிருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச, தனது நிறைவேற்று அதிகாரத்தையும், ஊடக அதிகாரத்தையும், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரங்களையும் பயன்படுத்தி, மக்கள் பணத்தை முறைகேடாக செலவிட்டதன் காரணமாகவே சில மாவட்டங்களில் வெற்றிபெற்றார்.

இல்லாவிட்டால், அவரால் அந்த மாவட்டங்களையும் வென்றிருக்க முடியாது எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

உண்மையான நிலைமை இப்படி இருக்க, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு சவால் விடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த முயற்சிக்கும் நபர்கள் தற்போது நேரடியாகவே தமது செயற்பாடுகளை முன்னேடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum