Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மக்கள் திருக்கேதீஸ்வர பகுதியில் மீள்குடியமர இடைக்கால தடை விதிப்பு

Go down

மக்கள் திருக்கேதீஸ்வர பகுதியில் மீள்குடியமர இடைக்கால தடை விதிப்பு Empty மக்கள் திருக்கேதீஸ்வர பகுதியில் மீள்குடியமர இடைக்கால தடை விதிப்பு

Post by oviya Mon Mar 09, 2015 1:03 pm

திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் மக்கள் மீள்குடியேற வேண்டாம் என புதைபொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் எதிர்வரும் 25ம் திகதி வரை தற்காலிகமாக மீள்குடியேற வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதி மக்கள் அவர்களது சொந்த காணிகளை துப்பரவு செய்து குடியேற நேற்று நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அந்த மக்களை குடியேறவேண்டாம் என பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

தமது பூர்வீக காணிகளே அவை என்று மக்கள் தெரிவித்தபோதும் குறித்த காணிகள் புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்துக்குரியவை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து புதைபொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் இன்று இந்த இடத்தை பார்வையிட்டதுடன், மக்களுடன் கலந்துரையாடி தற்காலிகமாக இந்நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் 25ம் திகதி தமது காணிகளில் குடியேற அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் குறித்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

1960ம் ஆண்டு இப்பகுதியில் குடியேறிய மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தனர்.

இந்நிலையில் யுத்தம் நிறைவுற்று 2010ம் ஆண்டு அப்பகுதிக்கு மீள்குடியேற வந்தபோது தொல்பொருள் வலயம் என தெரிவித்து தம்மை மீளக்குடியமர அனுமதிக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum