Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இனி தலைமன்னார் வரை ரயில் பயணம் - இந்தியா விடுத்த கோரிக்கை இலங்கை அரசினால் நிராகரிப்பு

Go down

இனி தலைமன்னார் வரை ரயில் பயணம் - இந்தியா விடுத்த கோரிக்கை இலங்கை அரசினால் நிராகரிப்பு Empty இனி தலைமன்னார் வரை ரயில் பயணம் - இந்தியா விடுத்த கோரிக்கை இலங்கை அரசினால் நிராகரிப்பு

Post by oviya Sun Mar 08, 2015 12:15 pm

மன்னார் மடுவிலிருந்து தலைமன்னார் வரையான புகையிரத பாதை நிர்மாண பணிகள் நிறைவுபெற்றுள்ளன ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இப்புகையிரத பாதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் எதிர்வரும் 14ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

63 கிலோ மீட்டர் நீளமுடைய இப்புகையிரத பாதை 143 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகையிரத பாதை திறப்பின் பின்னர் மடுவிலிருந்து தலைமன்னார் வரையும், தலைமன்னாரிலிருந்து மதவாச்சி வரையும் சில ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா விடுத்த கோரிக்கை இலங்கை அரசினால் நிராகரிப்பு

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவையை அடுத்தவாரம் ஆரம்பிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை, மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஏ.எம்.ஜே.சாதிக் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம் தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவையை அடுத்தவாரமே ஆரம்பிக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் முறையான இறங்கு துறை வசதிகள் மற்றும் போதியளவு வசதிகள் செய்யப்படாமையினால் பயணிகள் கப்பல் சேவையை தற்போது ஆரம்பிப்பது சாத்தியமாகாது என வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் தலைமன்னார் இறங்குதுறையை திருத்தியமைக்க கடனுதவி வழங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இராமேஸ்வரம் இறங்குதுறைகளிலும் போதியளவு வசதியில்லாவிட்டால் இந்த கடனுதவி வழங்குவதில் பயனில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த இரு இறங்கு துறைகளிலும் இவ்வசதிகள் பயணிகளை கவர்வதற்கு அவசியமானது என இலங்கை அரசு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தூத்துக்குடி – கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதிலும் இந்தியா ஆர்வம் காட்டிய போதிலும், அது வர்த்தக ரீதியாக இலாபம் தராது இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இருந்த போதிலும் இரு கப்பல் சேவைகளையும் ஆரம்பிப்பதில் இரு நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum