Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுடன் நோர்வே தூதுவர் சந்திப்பு

Go down

வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுடன் நோர்வே தூதுவர் சந்திப்பு Empty வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுடன் நோர்வே தூதுவர் சந்திப்பு

Post by oviya Fri Mar 06, 2015 1:37 pm

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கண்டி வீதி, அரியாலையில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் பகுதியில் நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்வதற்கு வடக்கு மாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தரையை ஊடுருவும் ரேடார் கருவியை வழங்கி உதவுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் கேட்டிருந்தது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பயன்படுத்தி வரும் ரேடார் உபகரணம் நோர்வே நாட்டால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும்.

இதன் அடிப்படையில், கடந்த வாரம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும் நோர்வே நிபுணர்களும் வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசனைச் சந்தித்து இதுதொடர்பாகக் கலந்துரையாடியதோடு, நிபுணர் குழுவையும் சந்தித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாகவே நோர்வே நாட்டுத் தூதுவரும் வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, தரையை ஊடுருவும் டேராரை விரைவில் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வருவதற்கு ஆவன செய்வதாகத் தெரிவித்த நோர்வே தூதுவர், நிபுணர் குழுவாலும் தூய நீருக்கான விசேட செயலணியாலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விபரமாகக் கேட்டறிந்து கொண்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum